பதிவு செய்த நாள்
22 ஆக2013
01:18
மும்பை:வரும் 2013-14ம் பருவத்தில் (அக்.,-செப்.,) நாட்டின் பருத்தி உற்பத்தி, நடப்பு பருவத்தை விட, 5 சதவீதம் அதிகரித்து, 3.72 கோடி பொதிகளாக (ஒரு பொதி- 170 கிலோ) உயரும் என, இந்திய பருத்தி கழகம் தெரிவித்துள்ளது.
பருவ மழை:நடப்பு ஆண்டில், பருத்தி உற்பத்திஆகும் பல மாநிலங்களில், பருவமழை நன்கு பெய்து வருவதால், வரும் பருவத்தில் இதன் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புஉள்ளதாக, இக்கழகத்தின் முதல் மதிப்பீட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இருப்பினும், பருத்தி சாகுபடி பரப்பளவு, நடப்பு பருவத்தின் அளவான, 116.14 லட்சம் ஹெக்டேர் என்ற அளவில் தான் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, கடந்த, 2011 - 12ம் பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட சாகுபடி பரப்பளவை விட, 5 லட்சம் ஹெக்டேர் குறை வாகும். ஒட்டு மொத்த அளவில், வரும் பருவத்திற்கான சாகுபடி பரப்பளவில் மாற்றம் இல்லை என்றாலும், குஜராத் மாநிலத்தில், சாகுபடி பரப்பளவு, 10 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு பருவமழை குறைந்து போனது மற்றும் ஒரு சில மாவட்டங்களில், கடும் வறட்சி நிலவியது போன்றவற்றால், குஜராத்தின் மொத்த பருத்தி சாகுபடி பரப்பளவு குறைந்து, உற்பத்தியும்சரிவடைந்துள்ளது.
நடப்பு பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.56 கோடி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த, 2011- 12ம் பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி,சாதனை அளவாக, 3.73 கோடி பொதிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கையிருப்பு:நடப்பு பருவத்தின் துவக்கத்தில், 1.41 கோடி பருத்தி பொதிகள் கையிருப்பில் இருந்தது.இந்நிலையில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பருத்திக்கான தேவை அதிகரித்து வருவதால், இதன் விலை, கடந்த ன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.ஒரு கேண்டி (ஒரு கேண்டி-356 கிலோ) பருத்தியின் விலை, தற்போது 47,000-47,500 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|