பதிவு செய்த நாள்
23 ஆக2013
03:47
மும்பை : வங்கிகள் வழங்கிய உணவு சாராக் கடன், கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஆகஸ்ட் 9ம் தேதி வரையிலான காலத்தில், 46.25 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 54 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 16.7 சதவீதம் வளர்ச்சி என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் முன்பாக, அதாவது கடந்த, 2012ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைந்த, இரு வார காலத்தில் வங்கிகள் வழங்கிய உணவு சாராக் கடன், இதே அளவிற்கு வளர்ச்சி கண்டிருந்தது.
பல நிறுவனங்கள், வர்த்தக ஆவணங்கள் உள்ளிட்ட, பல்வேறு நிதி சார்ந்த பத்திரங்கள் வெளியீடுகள் வாயிலாக அவற்றிற்கு தேவையான நிதியை திரட்டி வந்தன. தற்போது, இது போன்ற ஆவணங்களை வெளியிட்டு நிதி திரட்ட இயலாத சூழ்நிலை உள்ளது. இதையடுத்து, நிறுவனங்கள் அவற்றிற்கு தேவையான, மூலதனத்தை வங்கிகளிடம் இருந்து கடனாக பெறத் துவங்கியுள்ளன. இதன் காரணமாகவே, உணவு சாராத வங்கிக் கடன், சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என, வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்த ஜூலை மாதம், 15ம் தேதி, ரிசர்வ் வங்கி, ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்கும் வகையில், ஒரு சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தியது. இதனால், சந்தையில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதுவும், வங்கிகளில் உணவு சாராக் கடன் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகும். கணக்கீட்டு காலத்தில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 13 சதவீதம் என்ற குறைந்த அளவில் வளர்ச்சி கண்டு, 62.86 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 71.04 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எச்.டீ.எப்.சி., ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட, சில வங்கிகள் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன. இதனால், இனிவரும் காலத்தில், வங்கிகள் திரட்டும் டெபாசிட் நல்ல அளவில் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|