உலக பொருளாதார சூழலே ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் - சிதம்பரம்உலக பொருளாதார சூழலே ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் - சிதம்பரம் ... வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உணவு சாரா வங்கி கடன் 16.7 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2013
03:47

மும்பை : வங்கிகள் வழங்கிய உணவு சாராக் கடன், கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஆகஸ்ட் 9ம் தேதி வரையிலான காலத்தில், 46.25 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 54 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 16.7 சதவீதம் வளர்ச்சி என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் முன்பாக, அதாவது கடந்த, 2012ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைந்த, இரு வார காலத்தில் வங்கிகள் வழங்கிய உணவு சாராக் கடன், இதே அளவிற்கு வளர்ச்சி கண்டிருந்தது.
பல நிறுவனங்கள், வர்த்தக ஆவணங்கள் உள்ளிட்ட, பல்வேறு நிதி சார்ந்த பத்திரங்கள் வெளியீடுகள் வாயிலாக அவற்றிற்கு தேவையான நிதியை திரட்டி வந்தன. தற்போது, இது போன்ற ஆவணங்களை வெளியிட்டு நிதி திரட்ட இயலாத சூழ்நிலை உள்ளது. இதையடுத்து, நிறுவனங்கள் அவற்றிற்கு தேவையான, மூலதனத்தை வங்கிகளிடம் இருந்து கடனாக பெறத் துவங்கியுள்ளன. இதன் காரணமாகவே, உணவு சாராத வங்கிக் கடன், சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது என, வாடிக்கையாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக, கடந்த ஜூலை மாதம், 15ம் தேதி, ரிசர்வ் வங்கி, ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்கும் வகையில், ஒரு சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தியது. இதனால், சந்தையில் பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதுவும், வங்கிகளில் உணவு சாராக் கடன் அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகும். கணக்கீட்டு காலத்தில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 13 சதவீதம் என்ற குறைந்த அளவில் வளர்ச்சி கண்டு, 62.86 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 71.04 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எச்.டீ.எப்.சி., ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட, சில வங்கிகள் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன. இதனால், இனிவரும் காலத்தில், வங்கிகள் திரட்டும் டெபாசிட் நல்ல அளவில் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)