பதிவு செய்த நாள்
23 ஆக2013
03:50
புதுடில்லி : இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, கணிசமாக அதிகரித்து வருவதாக, மத்திய சுற்றுலா துறை அமைச்சர் சிரஞ்சீவி ராஜ்யசபாவில் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: பாதுகாப்பு கடந்த 2012ம் ஆண்டு, ஜூலை மாதத்தை விட, நடப்பாண்டு ஜூலை மாதம், இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 7.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில், சுற்றுலா காவலர்களை நியமிக்குமாறு, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை, சுற்றுலா அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சகம், மறுகுடியமர்வு தலைமை இயக்குனரகம் ஆகியவற்றின் ஆலோசனையின் பேரில், முன்னாள் ராணுவ வீரர்களை கொண்ட, சுற்றுலா வசதி மற்றும் பாதுகாப்பு அமைப்பு (டி.எப். எஸ்.ஓ.,) உருவாக்கப்படும். இதற்கான விதிமுறைகளை சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த அமைப்பை உருவாக்க, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு, மத்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளது.பீகார்சென்ற ஜூலை 7ம் தேதி, பீகாரின் புத்த கயாவில், குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு பின், அங்கு வந்த கொரியா, சீனா, மியான்மர், ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா மற்றும் தைவான் நாடுகளின் புத்த மத சுற்றுலா பயணிகள் குறித்த புள்ளிவிவரம் அமைச்சகத்திடம் இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|