பதிவு செய்த நாள்
23 ஆக2013
03:51
ஈரோடு : ஈரோடு ஒழுங்குமுறை சந்தை கூட்டமைப்பிற்கு (ஆர்.எம்.சி.,), மஞ்சள் வரத்து குறைந்துள்ளது. ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கம், மஞ்சள் சந்தைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவித்தது.இதையடுத்து, மிக குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள், ஆர்.எம்.சி.,க்கு மஞ்சளை கொண்டு வந்தனர். நேற்று முன்தினம், 73 மஞ்சள் மூட்டைகள் வரத்தானது.
இவற்றில் 60 சதவீதம், அதாவது, 45 மூட்டைகள் மட்டுமே விற்பனையாயின. ஓரிரண்டு வியாபாரிகள் மட்டுமே, உள்ளுர் சப்ளைக்காக, இவற்றை கொள்முதல் செய்தனர்.விளைபொருள் முன்பேர சந்தையில், ஒரு குவிண்டால் கிழங்கு மஞ்சள், 4,800 ரூபாயாக உள்ளது. வெளிச் சந்தையிலும், இதே அளவிலான விலையில் தான் மஞ்சள் விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.எம்.சி.,யில், ஒரு குவிண்டால் விரலி மஞ்சள், 4,789 -5,701 ரூபாய்க்கும், கிழங்கு மஞ்சள், 4,116 -5,169 ரூபாய்க்கு விலை போனது. தீபாவளிக்குள், ஒரு குவிண்டால் மஞ்சள் விலை, 8,000 ரூபாயாக உயரும் என, எதிர்பார்ப்பதாக, விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|