செலாவணி வரத்தை அதிகரிக்க... பட்டியலிடப்படாத நிறுவனங்கள் வெளிநாடுகளில் நிதி திரட்ட அனுமதி?செலாவணி வரத்தை அதிகரிக்க... பட்டியலிடப்படாத நிறுவனங்கள் வெளிநாடுகளில் ... ... சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு சந்தையில் மீண்டும் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2013
03:57

மும்பை : தொடர்ந்து சரிவைக் கண்டு வந்த இந்திய பங்குச் சந்தை, நேற்று மீண்டும் எழுச்சி கண்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "சென்செக்ஸ்', 2.27 சதவீதம் உயர்ந்தது.சீனாவின் தயாரிப்பு துறை, கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.இந்திய பங்குச் சந்தையில், உலோக துறை சார்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, 8-10 சதவீதம் வரை உயர்ந்தது.
மேலும், வங்கிகளின் வ‹லாகாத கடனை குறைக்கும் நோக்கில் விதிமுறைகளில் சீர்திருத்தம் செய்ய உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. இதனால், வங்கிப் பங்குகளின் விற்பனை ‹டு பிடித்தது. மொத்தத்தில், நேற்றைய வியாபாரத்தில், பெரும்பாலான நிறுவனப் பங்குககள் அதிக விலைக்கு கைமாறின. குறிப்பாக, டாட்டா ஸ்டீல், ரான்பாக்சி, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், ஜிந்தால் சா, சேச கோவா ஆகிய ஐந்து நிறுவனங்களின் பங்குகள் விலை, 15 - 20 சதவீதம் வரை உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 407.03 புள்ளிகள் உயர்ந்து, 18,312.94 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,349.82 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,759.59 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள்,எச்.டீ.எப்.சி., நிறுவனம் மற்றும் எச்.டீ.எப்.சி பேங்க் தவிர, ஏனைய 28 நிறுவனப் பங்குகள், விலை உயர்வைக் கண்டன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 105.90 புள்ளிகள் உயர்ந்து, 5,408.45 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,418.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,254.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)