பதிவு செய்த நாள்
24 ஆக2013
01:17
மும்பை:இந்திய பங்குச் சந்தை,நேற்றும் எழுச்சி கண்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "சென்செக்ஸ்', 1.13 சதவீதம் உயர்ந்தது.நேற்று முன்தினம் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து, அன்னியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு உயர்ந்தது. இதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் நன்கு இருந்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளை பொறுத்தவரை, இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த சாதகமான தகவலை அடுத்து, அந்நாட்டின் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. எனினும், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் சுணக்கம் கண்டன. ஆசிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்று, இந்திய பங்குச் சந்தையில், மின்சாரம், உருக்கு, நுகர்பொருள் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிக விலையில் கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 206.50 புள்ளிகள் உயர்ந்து, 18,519.44 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,546.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,210.75 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., டாடா பவர், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சிப்லா, பார்தி ஏர்டெல், என்.டி.பி.சி., உள்ளிட்ட 7 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 63.30 புள்ளிகள் உயர்ந்து, 5,471.75 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,478.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,377.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|