ரூ.1,000கோடி முதலீட்டில் மகளிர் பாதுகாப்பு நிதியம்ரூ.1,000கோடி முதலீட்டில் மகளிர் பாதுகாப்பு நிதியம் ... உச்சத்தில் தங்கம் விலை - ரூ.24,384 உச்சத்தில் தங்கம் விலை - ரூ.24,384 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
எழுச்சி பாதையில் பங்கு வர்த்தகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2013
01:17

மும்பை:இந்திய பங்குச் சந்தை,நேற்றும் எழுச்சி கண்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "சென்செக்ஸ்', 1.13 சதவீதம் உயர்ந்தது.நேற்று முன்தினம் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து, அன்னியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு உயர்ந்தது. இதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையிலும் வர்த்தகம் நன்கு இருந்தது.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளை பொறுத்தவரை, இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி குறித்த சாதகமான தகவலை அடுத்து, அந்நாட்டின் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. எனினும், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் சுணக்கம் கண்டன. ஆசிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.நேற்று, இந்திய பங்குச் சந்தையில், மின்சாரம், உருக்கு, நுகர்பொருள் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் அதிக விலையில் கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 206.50 புள்ளிகள் உயர்ந்து, 18,519.44 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,546.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,210.75 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., டாடா பவர், ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சிப்லா, பார்தி ஏர்டெல், என்.டி.பி.சி., உள்ளிட்ட 7 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 63.30 புள்ளிகள் உயர்ந்து, 5,471.75 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,478.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,377.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)