பதிவு செய்த நாள்
24 ஆக2013
14:18
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் மழை பொய்த்ததால், தேங்காய் விளைச்சல் குறைந்து, விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், தேவை அதிகரிப்பால், கொப்பரை பருப்பு விலை 42 லிருந்து 48 ரூபாயாக உயர்ந்துள்ளது. இம்மாவட்டத்தில் கீழக்கரை, பெரிய பட்டினம், காஞ்சிரங்குடி, பெருங்குளம், தாமரைக்குளம், ரெகுநாதபுரம் பகுதிகளில், போதிய மழையில்லாததால் நூற்றுக்கணக்கான ஏக்கரில், தென்னை விளைச்சல் குறைந்துள்ளது. கடந்த மாதம் 42 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை பருப்பை, தேவை அதிகரிப்பால், 48 க்கு வாங்க, வியாபாரிகள் முன் வந்துள்ளனர். முற்றிய தேங்காய் கிலோ 12 லிருந்து 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பெரியபட்டினம் தென்னை விவசாயி மாலிக் கூறியதாவது: விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், தண்ணீரின்றி தேங்காய் காய்ப்பு குறைந்து விட்டது. அதனால், விலையில் சற்று உயர்வு ஏற்பட்டுள்ளது. உரம், மருந்தடிப்பு, வெட்டுக்கூலி, உரி கூலி போன்ற செலவை தாங்கி, தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளோம். கொப்பரை விலை உயர்வு சற்று ஆறுதலை அளிக்கிறது, என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|