பதிவு செய்த நாள்
25 ஆக2013
00:12
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 16ம்தேதியுடன் நிறை வடைந்த வாரத்தில், 20.60 கோடி டாலர் (1,215கோடி ரூபாய்) அதிகரித்து, 27,880.60கோடி டாலராக (16.45 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய வாரத்தில், 27,860 கோடி டாலராக (16.44 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு,21.17 கோடி டாலர் உயர்ந்து,25,156 கோடிடாலராக வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம்,கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, மாற்றம் எதுவுமின்றி,2,075 கோடிடாலர் என்ற அளவிலேயே உள்ளது. கணக்கீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 39 லட்சம் டாலர் சரிவடைந்து, 439.61 கோடி டாலராக குறைந்துள்ளது.
இதேபோன்று,சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள அன்னியச் செலாவணி கையிருப்பு, 20 லட்சம் டாலர் சரி வடைந்து, 210.50 கோடி டாலராக குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளில் ஏற்பட்ட மாறுபாட்டால், மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|