வாகன ஏற்றுமதி வருவாய் 6 சதவீதம் குறைவு வாகன ஏற்றுமதி வருவாய் 6 சதவீதம் குறைவு ... நெல் வரத்து அதிகரிப்பு: அரிசி விலை குறைகிறது நெல் வரத்து அதிகரிப்பு: அரிசி விலை குறைகிறது ...
ஒருசவரன் ஆபரண தங்கம் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2013
00:15

சென்னை:நேற்று, ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 432 ரூபாய் அதிகரித்து, 24,384 ரூபாய்க்கு விற்பனையானது.
சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் சரிவு உள்ளிட்ட காரணங்களால், உள்நாட்டில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,994 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,952 ரூபாய்க்கும் விற்பனையானது.
24 காரட்10 கிராம் சுத்த தங்கம், 32,020 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 54 ரூபாய் உயர்ந்து, 3,048 ரூபாய்க்கு விற்பனையானது.சவரனுக்கு, 432 ரூபாய் அதிகரித்து, 24,384 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது.10 கிராம் சுத்ததங்கம், 580 ரூபாய் உயர்ந்து, 32,600 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த ஆண்டு செப்., 8ம் தேதி, முதன் முறையாக, ஒரு கிராம் தங்கம், 3,022 ரூபாய்க்கும், சவரன், 24,176 ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கம் விலை மிகவும் அதிகபட்சமாக, அதே ஆண்டு, நவ., 26ம் தேதி, ஒரு கிராம், 3,068 ரூபாய்க்கும், ஒரு சவரன், 24,544 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்ற திங்களன்று (19ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,938 ரூபாய்க்கும்,ஒரு சவரன், 23,504 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆக, கடந்தவாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாயும், சவரனுக்கு, 880 ரூபாயும் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், சர்வதேச சந்தையில், கடந்த வாரத்தில், ஒருஅவுன்ஸ் தங்கம், 60 டாலர் உயர்ந்து, 1,400 டாலராக அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால்,இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)