பதிவு செய்த நாள்
25 ஆக2013
00:15
சென்னை:நேற்று, ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 432 ரூபாய் அதிகரித்து, 24,384 ரூபாய்க்கு விற்பனையானது.
சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் சரிவு உள்ளிட்ட காரணங்களால், உள்நாட்டில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,994 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,952 ரூபாய்க்கும் விற்பனையானது.
24 காரட்10 கிராம் சுத்த தங்கம், 32,020 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், நேற்று, ஒரே நாளில், தங்கம் விலை கிராமுக்கு, 54 ரூபாய் உயர்ந்து, 3,048 ரூபாய்க்கு விற்பனையானது.சவரனுக்கு, 432 ரூபாய் அதிகரித்து, 24,384 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது.10 கிராம் சுத்ததங்கம், 580 ரூபாய் உயர்ந்து, 32,600 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த ஆண்டு செப்., 8ம் தேதி, முதன் முறையாக, ஒரு கிராம் தங்கம், 3,022 ரூபாய்க்கும், சவரன், 24,176 ரூபாய்க்கும் விற்பனையானது. தங்கம் விலை மிகவும் அதிகபட்சமாக, அதே ஆண்டு, நவ., 26ம் தேதி, ஒரு கிராம், 3,068 ரூபாய்க்கும், ஒரு சவரன், 24,544 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்ற திங்களன்று (19ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,938 ரூபாய்க்கும்,ஒரு சவரன், 23,504 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆக, கடந்தவாரத்தில் மட்டும், தங்கம் விலை கிராமுக்கு, 110 ரூபாயும், சவரனுக்கு, 880 ரூபாயும் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், சர்வதேச சந்தையில், கடந்த வாரத்தில், ஒருஅவுன்ஸ் தங்கம், 60 டாலர் உயர்ந்து, 1,400 டாலராக அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால்,இந்தியாவிலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|