ஒருசவரன் ஆபரண தங்கம் ரூ.24 ஆயிரத்தை தாண்டியதுஒருசவரன் ஆபரண தங்கம் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது ... சிகிச்சை செலவு குறைந்துள்ளதால் இந்தியாவில் குவியும் மருத்துவ சுற்றுலா பயணிகள் சிகிச்சை செலவு குறைந்துள்ளதால் இந்தியாவில் குவியும் மருத்துவ சுற்றுலா ... ...
நெல் வரத்து அதிகரிப்பு: அரிசி விலை குறைகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2013
00:21

நெல்வரத்து அதிகரித்துள்ளதால்,ஒருமூட்டைக்கு,150முதல்,200ரூபாய்வரை,அரிசி விலை குறைந்துள்ளது.இதன் விலை, மேலும் வீழ்ச்சி அடையும் என, அரிசி ஆலை அதிபர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில், கொங்கு மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டாலும், தென் மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்துள்ளது.
நெல் உற்பத்தி :அதே சமயம் கர்நாடகாவில் பெய்த பலத்த மழை காரணமாக, மேட்டூர் அணை நிரம்பி, டெல்டா மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் உரிய நேரத்தில் சென்றுள்ளது. மேலும்,டெல்டா மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது.இதன் மூலம் நடப்பாண்டு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு,நெல் உற்பத்தி அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரும் அரிசி ரகங்களின் விலை குறைந்துள்ளது.கடந்த, 2012 ஆகஸ்ட், 22ம்தேதி கர்நாடகாவில் இருந்து வந்த(மொத்தவிலையில்) வெள்ளை பொன்னிஅரிசி,75 கிலோ மூட்டை,3,225 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது மூட்டை, 3,450 ரூபாய்க்கு விற்பனை யாகிறது.
வெள்ளை பொன்னி:பி.பி.டி., சன்னரகம் ஒரு மூட்டை,2,475 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு மூட்டை,2,850 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கர்நாடகா டீலக்ஸ் உயர் ரகம் அரிசி ஒரு மூட்டை,3,150 ரூபாய்க்கு விற்பனையானது.இது, தற்போது, 3,375 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கடந்த சில நாட்களாக நிலைமை மாறி, அரிசி விலை படிப்படியாக குறையத் துவங்கி உள்ளது.செஞ்சியில் இருந்து வரக்கூடிய வெள்ளைபொன்னி,ஒரு மூட்டை,3,450ரூபாயிலிருந்து,3,225ரூபாயாக குறைந்துள்ளது. பி.பி.டி.ரகம் ஒருமூட்டை, 3,150லிருந்து,2,850ரூபாயாககுறைந்துள்ளது.ஏ.டி.டி.,43 ரகம்அதிசய பொன்னி ஒரு மூட்டை, 2,250லிருந்து, 2,100 ரூபாயாக குறைந்துள்ளது.
ஏ.டி.டி.,45 ரகம் அரிசி ஒரு மூட்டை, 2,175லிருந்து,1,950 ரூபாயாக குறைந்துள்ளது.கிராம்தார் இட்லிஅரிசி ஒரு மூட்டை, 2,625லிருந்து,2,475 ரூபாயாக குறைந்துள்ளது.ஏ.டி.டி., இட்லி அரிசி ஒரு மூட்டை,2,250லிருந்து,2,025ரூபாயாக குறைந் துள்ளது.அம்பை,16 ரக அரிசி ஒரு மூட்டை,2,250லிருந்து, 2,025 ரூபாயாக குறைந்து உள்ளது.இது குறித்து,சேலம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சியாமளநாதன் கூறியதாவது:
கடந்த,2012ம் ஆண்டு அதிகளவு வறட்சி காணப்பட்டதால்,ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, அரிசிவிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. குறிப்பாக அக்டோபர் மாதம் முதல், தொடர்ந்து நடப்பாண்டு ஜூலை வரை, இட்லி அரிசி உட்பட பொன்னி பச்சரிசி, பொன்னி புழுங்கல் அரிசி என, அனைத்துமே விலை உயர்ந்து காணப்பட்டன.
புழுங்கல் அரிசி:பொன்னி புழுங்கல், பொன்னி பச்சரிசி ஒரு கிலோ, 55 ரூபாய் வரை சென்றது. அரிசி விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்ததால், ஏழை குடும்பத்தை சேர்ந்த பலர் ரேஷன் அரிசியை சாப்பிட ஆரம்பித்தனர்.எப்போது அரிசி விலை இறங்கும் என, நடுத்தர மற்றும் ஏழை மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் கனவு பலித்தது போல, பத்து மாதங்களுக்கு பின், தற்போது அரிசி விலை குறைந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையின்போது, தென் மாவட்டங்களில் குறைந்த அளவிற்கே மழை பெய்யும். ஆனால், நீண்ட காலத்துக்கு பிறகு நடப்பாண்டு யாருமே எதிர்பாராத வகையில் பலத்த மழை பெய்தது.எனவே, இந்த பகுதியில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு, நெல் விளைச்சல் அதிகம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கர்நாடகா:சேலம் பகுதியில் மழை பெய்யாவிட்டாலும்,கர்நாடகாவில் தொடர்ந்து பெய்த மழையால்,மேட்டூர் அணை நிரம்பி,டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.போதுமான தண்ணீர்,விவசாயிகளுக்கு கிடைத்துள்ளதால்,விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் தெற்கு,டெல்டாமாவட்டங்களில் இருந்து, 19 லட்சம் டன் நெல் உற்பத்தியாகும்.ஆனால்,நடப்பாண்டு நெல் விளைச்சல்,25 லட்சம் டன்னை தாண்டும் என நம்பலாம். இரண்டு மாதத்தில் அரிசி விலையில் மேலும் சரிவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)