பதிவு செய்த நாள்
27 ஆக2013
04:20
மும்பை:தமிழகம் மற்றும் ஒடிசாவில், "அல்ட்ரா மெகா மின் திட்டம் (யு.எம்.பீ.பீ.,)' மேற்கொள்ள, பாதுகாப்பு அமைச்சர் அந் தோணி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.
செய்யூர்:இதையடுத்து, தமிழகத்தில், செய்யூரிலும், ஒடிசாவில், பெதபாகல் என்ற இடத்திலும், தலா 4,000 மெகா வாட் மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளன.மத்திய மின் அமைச்சகம், ஒரு மாதத்திற்குள், மேற்கண்ட திட்டங்களுக்கான பணிகளை துவக்கும் என, தெரிகிறது.
இது குறித்து, மத்திய மின் அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்த மின் திட்டங்கள், தலா, 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், 8,000 மெகா வாட் என்ற அளவிற்கு, மின் உற்பத்தி திறன் அதிகரிக்கும். பவர் பைனான்ஸ் கார்ப்ப ரேஷன், இத்திட்டங்களுக்கான முகமை அமைப்பாக öணூயல்படும். ஓராண்டிற்கு முன்பாக வே, ஒடிசா மெகா மின் திட்டத்தில் பங் கேற்க, தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.
இதையடுத்து, ஜிந்தால் பவர், ஸ்டெர்லைட், ஜே.எஸ். டபிள்யூ எனர்ஜி, நால் கோ, சிக் நேச்சர் எனர்ஜி, வெல்ஸ்பன், டாட்டா பவர், என்.டி. பி.சி., ஜெய்பிரகாஷ் பவர் வென்ணூர்ஸ், டோரன்ட் பவர், எல் அண்டு டி, அதானி பவர் உள்ளிட்ட 20 நிறுவனங்கள், விண்ணப்பித்தன.ஆனால், அவை இறுதி செய்யப்படவில்லை. தற் போது, அவை, ரத்து செய்யப்பட்டு, மீண்டும் புதிய விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன.தமிழ்நாட்டில், செய்யூர் மெகா மின் உற்பத்தி திட்டத்திற்கு, இதுவரை ஒப்பந்த புள்ளிகள் கோரப்படவில்லை.
மின் சாதனங்கள்:இந்த மின் திட்டங்கள் மூலம், உள்நாட்டில், மின் உற்பத்தி ணூாதனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் உட்பட, அது ணூார்ந்த சிறு நிறுவனங்களும் பயன்பெறும்.மின் உற்பத்தி திட்டத்தில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், மின் உற்பத்தி துறையில் தனியார் பங்களிப்பு அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|