பதிவு செய்த நாள்
27 ஆக2013
10:37
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(ஆகஸ்ட் 27ம் தேதி, செவ்வாய்கிழமை) இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குசந்தையின் சென்செக்ஸ் 221.29 புள்ளிகள் சரிந்து 18,336.84-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 80.95 புள்ளிகள் சரிந்து 5,395.55-ஆகவும் இருந்தது.
ரூபாயின் மதிப்பு ரூ.66.06 எனும் உச்சநிலை சரிவை தொட்டதால் பின்னர் 02.00 மணியளவில் இந்திய பங்குசந்தைகளும் கடும் சரிவை சந்திக்க தொடங்கின. சென்செக்ஸ் 576.68 புள்ளிகள் சரிந்து 17,981.45 எனும் நிலையிலும், நிப்டி 177.15 புள்ளிகள் சரிந்து 5,299.35-ஆகவும் சரிந்து இருந்தன.
இந்திய பங்குசந்தை போன்று ஆசியாவின் பிற பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.24 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 0.62 சதவீதமும் சரிந்து இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|