பதிவு செய்த நாள்
27 ஆக2013
10:58
புதுடில்லி : ரூ.1.83 லட்சம் கோடி மதிப்பில், பல்வேறு திட்டங்களுக்காக, முதலீட்டுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், இதில் 18 திட்டங்கள் மின்துறை சம்பந்தப்பட்ட திட்டங்கள் என்றும் அதற்கான மதிப்பு ரூ.83.77 ஆயிரம் கோடி என்றும், ஏற்கனவே ரூ.30 ஆயிரம் கோடிக்கு வங்கிகள் பணம்பட்வாடா செய்துள்ளதாகவும், 18 மின்துறை திட்டங்களுக்கான எரிபொருள் வழங்குவது தொடர்பாக செப்டம்பர் 6-ல் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாகவும், இதுதவிர 9 உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.92.54 ஆயிரம் கோடிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ரூபாயின் மதிப்பு தொடர்பான வீழ்ச்சி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சரிவில் இருந்து சீக்கிரம் மீளும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சிதம்பரம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|