பதிவு செய்த நாள்
27 ஆக2013
11:53
சென்னை : தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம்விலை மீண்டும் ரூ.24 ஆயிரத்தை தாண்டி இருந்தது. இந்நிலையில் இன்று(ஆகஸ்ட் 27ம் தேதி, செவ்வாய்கிழமை) அதிரடியாக சவரனுக்கு ரூ.1,152 குறைந்துள்ளது. அதேசமயம் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.2,100 உயர்ந்துள்ளது.
சென்னை தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,901-க்கும், சவரனுக்கு ரூ.1,152 குறைந்து ரூ.23,208-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.1,535 குறைந்து ரூ.31,030-க்கும் விற்பனையாகிறது.
அதேசமயம் வெள்ளியின் விலை குறைந்தபாடில்லை. தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.2.10 காசுகள் உயர்ந்து ரூ.60.80-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.1,980-உயர்ந்து ரூ.57,610-க்கும் விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|