பதிவு செய்த நாள்
27 ஆக2013
15:06
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால், மீன் விலை கிலோவிற்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகளில், சில நாட்களாக மாலை நேரங்களில் வீசும் இதமான காற்றால், "சீலா' உட்பட பல வகை மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம், மீன் மார்கெட்டில் ஏறுமுகத்தில் இருந்த மீன்களின் விலை, தற்போது இறங்கு முகத்தில் உள்ளது. கடந்தவாரம், 320 க்கு விற்ற வாவல் 300க்கும், 200 க்கு விற்ற மாவுலா 180க்கும், 120க்கு விற்ற வில மீன் 100க்கும், 80க்கு விற்ற நகர 60க்கும், 160க்கு விற்ற பாறை 150க்கும், 80க்கு விற்ற காரல் 60க்கும், 160க்கு விற்ற இறால் 150க்கும் குறைந்துள்ளது. அதேபோல், ரூ.320க்கு விற்ற சீலா, தற்போது 270க்கு விலை குறைந்துள்ளது. "சூடை' மீனுக்கு கேரளாவில் கிராக்கி ஏற்பட்டுள்ளதால், அதிகளவு கேரளாவிற்கு அனுப்பப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|