பதிவு செய்த நாள்
28 ஆக2013
00:06
புதுடில்லி:மத்திய அரசு, 1.83 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 36 அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என, நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இதில்,83,773 கோடி ரூபாய் மதிப்பிலான,18 மின் துறை கட்டமைப்பு திட்டங்களுக்கான அனுமதியும் அடங்கும். இது தவிர,சாலை,ரயில்வே,பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட,18 அடிப்படை கட்டமைப்பு திட்டங் களுக்கும் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.உள்நாட்டில், முதலீட்டு நடவடிக்கைகளை முடுக்கி விடும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, 85 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 9 திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும், கேபினட் முதலீட்டு குழு பரிசீலனையில் உள்ளது.திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில், நிலம் கையகப்படுத்தல் பிரச்னை பெரும் தடைக்கல்லாக உள்ளது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|