பதிவு செய்த நாள்
28 ஆக2013
00:17
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் செவ்வாய்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மத்திய அரசின் மானியச் சுமை மேலும் அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டாலும், அன்னிய நிதி நிறுவனங்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும், இந்திய பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன.
குறிப்பாக, "சென்செக்ஸ்' 3.18 சதவீதம் சரிவுடன்,18 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் சரிவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியபங்குச் சந்தைகளிலும்,வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. இதுவும், இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. நேற்றைய வியாபாரத்தில்,வங்கி,பொறியியல், மின்சாரம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட,பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
எனினும், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு மட்டும், ஓரளவிற்கு தேவை காணப் பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', 590.05 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,968.08 புள்ளி களில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,460.72 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,921.82 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., எச்.டீ.எப்.சி., ஜிந்தால் ஸ்டீல் உள்ளிட்ட, 27 நிறு வனப்பங்குகள் விலை வீழ்ச்சி கண்டும்,இன்போசிஸ்,டாக்டர் ரெட்டீஸ் மற்றும் சேசகோவா ஆகிய மூன்று நிறுவனப் பங்குகள் மட்டும் விலை உயர்ந்தும் காணப்பட்டன.தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 189.05 புள்ளிகள் சரிவு அடைந்து, 5,287.45 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிக பட்சமாக, 5,427.40 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,274.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|