80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பென்சன்80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பென்சன் ... பெட்ர‌ோல் விலையும் உயரும் அபாயம் பெட்ர‌ோல் விலையும் உயரும் அபாயம் ...
தங்கம் வாங்குவதைவிட விற்பது அதிகரிப்பு: நிலையில்லாத விலையால் மக்கள் குழப்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2013
16:43

கடலூர்:தங்கத்தின் விலை திடீர், திடீரென குறைவதும், ஏறுவதுமாக உள்ளதால் மக்கள் தங்கத்தை வாங்குவதைத் தவிர்த்து கையிருப்பில் உள்ளதை விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இதனால், நகைக்கடைகளில் விற்பனையின்றி வெறிச்சோடுகிறது.

தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் விற்பனை வெகுவாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக தங்க நகைகள் விற்பனை செய்யும் நகைக் கடைகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இவர்கள், வியாபார போட்டி காரணமாக பல்வேறு சலுகைகள், பரிசு போன்ற திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.கடலூர் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளன. இவற்றில், தங்கத்தின் விலை, சென்னை விலையை விட கிராமுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக இருக்கும். இந்நிலையில், மாவட்டத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த 15 தினங்களாக சென்னை விலையை விட கிராமிற்கு 200 ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் சென்னையில் தங்கம் கிராம் 3,055 ரூபாயாக இருந்த நிலையில் கடலூரில் 2,838 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.கடலூர் மாவட்ட தங்க சந்தையில், எப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை கடுமையாக குறைந்த போதிலும், கடந்த 15 தினங்களாக நகைக் கடைகள் விற்பனையின்றி வெறிச்சோடி வருகிறது. அதே நேரத்தில் தங்கத்தை விற்க வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கடலூரைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப தங்கத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வந்ததாலும், வங்கிகளில் வைப்பு தொகைகளுக்கான வட்டி குறைவாக இருப்பதால், பொதுமக்கள் தங்கள் சேமிப்புகளை தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருவதால், வங்கிகளில் பொதுமக்கள் சேமிப்பாக முதலீடு செய்திருந்த வைப்பு தொகைகள் குறைந்து வருகிறது.நிலமையை சமாளிக்க மத்திய நிதியமைச்சர், வங்கிகளில் சுத்த (24 கேரட்) தங்க நாணயங்கள் மீதான வரியை உயர்த்தியது. மேலும், தங்க நாணய விற்பனையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.

இந்நிலையில் தங்கத்தின் விலை கிராமிற்கு 500 ரூபாய் வரை குறைந்தது. இதனால், வங்கி நிர்வாகங்கள், அடகு நகைகளை மீட்டுச் செல்லுமாறு வாடிக்கையாளர்களுக்கு "நோட்டீஸ்' அனுப்பியது.அதில், தங்கத்தின் விலை குறைந்து வருவதால், தாங்கள் அடகு வைத்துள்ள நகைகளை உடனடியாக மீட்டுச் செல்லுமாறு குறிப்பிட்டிருந்ததைக் கண்டு, தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதாக கருதி பலர், வங்கிககளில் அடகு வைத்திருந்த நகைகளை மீட்டு, விற்பனை செய்து வருகின்றனர்.

அதே நேரத்தில் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், அதே நேரத்தில் இந்திய தங்க விலையை விட உள்ளூர் சந்தையில் கிராமிற்கு 200 ரூபாய் குறைவாகவே 24 கேரட் தங்கம் கிடைக்கிறது.இதன் பயனை வாடிக்கையாளர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே, தங்கத்தின் விலையை கிராமிற்கு 200 ரூபாய் குறைத்து விற்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.சென்னை விலையை விட கடலூர் மாவட்டத்தில் தங்கத்தின் விலை கிராமுக்கு 200 ரூபாய் குறைவாக இருந்த போதிலும், நகை விற்பனை 10 சதவீதம் மட்டுமே நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், தங்கத்தை விற்பனை செய்யும் வாடிக்கையாளர்களின் வருகை 80 சதவீதம் அதிகரித்துள்ளது.விற்பனை இல்லாமல், தங்க கொள்முதல் மட்டுமே நடைபெற்று வருவதால், வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் தங்கத்தை கடைக்காரர்கள் விலை குறைத்து வாங்குவதாக நுகர்வோர் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)