பதிவு செய்த நாள்
29 ஆக2013
00:06
சென்னை:நேற்று, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 560 ரூபாய் உயர்ந்து, 23,768 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது.சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம், சவரனுக்கு, 1,000 ரூபாய்க்கும் மேல் குறைந்திருந்த தங்கம் விலை, நேற்று, 500 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்திருந் தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,901 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,208 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 31,030 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 70 ரூபாய் உயர்ந்து, 2,971 ரூபாய்க்கு விற்பனைஆனது.சவரனுக்கு, 560 ரூபாய் அதிகரித்து, 23,768 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 750 ரூபாய் உயர்ந்து, 31,780 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 64.40 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 60,155 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|