பதிவு செய்த நாள்
30 ஆக2013
01:17
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அர”, வரும் செப்டம்பர், 17ம் தேதி, 8,000 கோடி ரூபாய் மானியம் வழங்கவுள்ளது.இதை, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குனர் (நிதி), பி.கே.கோயல் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:
நடப்பு, 2013-14ம் நிதியாண்டின், முதல் காலாண்டிற்கான மானியம், வரும் செப்டம்பர், 17ம் தேதி வழங்கப்படும் என, மத்திய அர” கடிதம் அனுப்பியுள்ளது.அடக்க விலைக்கும் குறைவாக மண்ணெண்ணெய், டீசல்,சமையல் எரிவாயு ஆகியவற்றை விற்பனை செய்த வகையில், முதல் காலாண்டில், மத்திய அர”, 25,579 கோடி ரூபாய் மானியம் வழங்க வேண்டும். ஆனால் இதில், 11,451 கோடி ரூபாய்க்கு குறைவாக, மானியம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், எண்ணெய் நிறுவனங்களின், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்து உள்ளது. இதனால், மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசலில், 10.22 ரூபாயும், மண்ணெண்ணெயில், 33.54 ரூபாயும், 14.2 கிலோ கொண்ட, ஒரு சமையல் எரிவாயு உருளை விற்பனையில், 412 ரூபாயும் இழப்பு ஏற்படுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|