பதிவு செய்த நாள்
30 ஆக2013
01:33
சேலம்:தமிழகத்தில், நியாயவிலை கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக, நுகர்பொருள் வாணிபக் கழகம், 60 ஆயிரம் டன் பருப்பு வகைகளை கொள்முதல் செய்ய "டெண்டர்' வெளியிட்டு உள்ளது.
இந்த அறிவிப்பால், வெளிச்சந்தையில் பருப்பு விலை கடுமையாக உயரும் என, வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், 10 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 25 ஆயிரம் டன் உளுந்தம் பருப்பு,25 ஆயி ரம் டன் கனடா "எல்லோ லெண்டிஸ் பருப்பு' என, மொத்தம், 60 ஆயிரம் டன் பருப்பை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை வெளியிட்டு உள்ளது.
இந்த"டெண்டர்'செப்.,12ம் தேதி திறக்கப்படுகிறது."டெண்டர்' எடுத்த நாளில் இருந்து,துவரம் பருப்பு, கனடியன் பருப்பை, 30 வேலை நாட்களிலும், உளுந்தம் பருப்பை, 45 வேலை நாட்களிலும், வினியோகம் செய்ய வேண்டும்.அரசு பொது வினியோக திட்டத்துக்காக, இவற்றை கொள்முதல் செய்வதால், தமிழகத்தில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்படுவதோடு, விலை உயரவும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில், கடந்த ஆண்டு நிலவிய வறட்சியால், ஆலை அதிபர்கள், வியாபாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து துவரை, உளுந்தம் பருப்பு வகைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|