பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ரூ.7,000 ஆக அதிகரிப்புபீப்பாய் கச்சா எண்ணெய் விலை ரூ.7,000 ஆக அதிகரிப்பு ... உணவு பாதுகாப்பு திட்டத்தால் பொருளாதாரம் பாதிப்படையும் தர குறியீட்டு நிறுவனம் "மூடீஸ்' கருத்து உணவு பாதுகாப்பு திட்டத்தால் பொருளாதாரம் பாதிப்படையும் தர குறியீட்டு ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சரிந்த ரூபாய் மதிப்பு 27 ஆண்டுகளுக்கு பின் ஒரே நாளில் 223 காசுகள் அதிகரித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2013
02:04

மும்பை:தொடர்ந்துசரிவைக் கண்டு வந்த இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று ஒரே நாளில், 3.27சதவீதம் உயர்ந்தது. இது, கடந்த 1986ம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் ஏற்பட்ட உயர்வாகும்.
கச்சா எண்ணெய்:நேற்று முன்தினம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில், 68.83 ஆக சரிவடைந்தது. இது, வர்த்தகத்தின் இடையே, 68.85ஐ எட்டியது. ஆக, ரூபாய் மதிப்பு, ஒரே நாளில், 256 காசுகள்சரிந்தன. இது, கடந்த 1995ம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது, 18 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரே நாளில் ஏற்பட்டசரிவாகும். இதே போன்று, நேற்று, ரூபாய் மதிப்பு, ஒரே நாளில் 223 காசுகள் உயர்ந்து, 66.60ல் நிலைபெற்றது. கடந்த 1986ம் ஆண்டுக்குப் பிறகு, நேற்று தான், ரூபாய் மதிப்பு, ஒரே நாளில், 3.27சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய்க்காக, பொதுத்துறையை சேர்ந்த மூன்று நிறுவனங்கள், நாள்தோறும் டாலரை வாங்கி வருகின்றன. மாத இறுதி நெருங்கியதால், ஒப்பந்தங்களை முடித்துக் கொள்ள, இந்நிறுவனங்கள் அதிக அளவில் டாலரை வாங்கத் துவங்கின. இதுவும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம்.இதையடுத்து, ரூபாய் மதிப்பின்சரிவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று முன்தினம், இரவு, ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
மூன்று எண்ணெய் நிறுவனங்கள்சார்பாக, டாலர் பரிமாற்ற நடவடிக்கைகளை, ஒரு வங்கி வாயிலாக மேற்கொள்ள உத்தரவிட்டது.இதையடுத்து, குறிப்பிட்ட நாளில், நிர்ணயித்த மதிப்பிற்கு டாலர் வாங்குவது, விற்பது தொடர்பான நடவடிக்கையை அவ்வங்கி, நேற்று துவக்கியது.
ரிசர்வ் வங்கி:இதனால், டாலருக்கான தேவை, கட்டுக்குள் வந்தது. மேலும், பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு அதிகரித்ததும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர வழி வகுத்தது.இதற்கிடையே, ""ரூபாயின் மதிப்பு சரிவடைவதை தடுக்க, ரிசர்வ் வங்கி, அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளது. இதேபோன்று மத்திய அரசும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பா ராவ், நேற்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)