பதிவு செய்த நாள்
30 ஆக2013
02:04
மும்பை:தொடர்ந்துசரிவைக் கண்டு வந்த இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று ஒரே நாளில், 3.27சதவீதம் உயர்ந்தது. இது, கடந்த 1986ம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் ஏற்பட்ட உயர்வாகும்.
கச்சா எண்ணெய்:நேற்று முன்தினம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வகையில், 68.83 ஆக சரிவடைந்தது. இது, வர்த்தகத்தின் இடையே, 68.85ஐ எட்டியது. ஆக, ரூபாய் மதிப்பு, ஒரே நாளில், 256 காசுகள்சரிந்தன. இது, கடந்த 1995ம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது, 18 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரே நாளில் ஏற்பட்டசரிவாகும். இதே போன்று, நேற்று, ரூபாய் மதிப்பு, ஒரே நாளில் 223 காசுகள் உயர்ந்து, 66.60ல் நிலைபெற்றது. கடந்த 1986ம் ஆண்டுக்குப் பிறகு, நேற்று தான், ரூபாய் மதிப்பு, ஒரே நாளில், 3.27சதவீதம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய்க்காக, பொதுத்துறையை சேர்ந்த மூன்று நிறுவனங்கள், நாள்தோறும் டாலரை வாங்கி வருகின்றன. மாத இறுதி நெருங்கியதால், ஒப்பந்தங்களை முடித்துக் கொள்ள, இந்நிறுவனங்கள் அதிக அளவில் டாலரை வாங்கத் துவங்கின. இதுவும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம்.இதையடுத்து, ரூபாய் மதிப்பின்சரிவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று முன்தினம், இரவு, ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
மூன்று எண்ணெய் நிறுவனங்கள்சார்பாக, டாலர் பரிமாற்ற நடவடிக்கைகளை, ஒரு வங்கி வாயிலாக மேற்கொள்ள உத்தரவிட்டது.இதையடுத்து, குறிப்பிட்ட நாளில், நிர்ணயித்த மதிப்பிற்கு டாலர் வாங்குவது, விற்பது தொடர்பான நடவடிக்கையை அவ்வங்கி, நேற்று துவக்கியது.
ரிசர்வ் வங்கி:இதனால், டாலருக்கான தேவை, கட்டுக்குள் வந்தது. மேலும், பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு அதிகரித்ததும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர வழி வகுத்தது.இதற்கிடையே, ""ரூபாயின் மதிப்பு சரிவடைவதை தடுக்க, ரிசர்வ் வங்கி, அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொண்டுள்ளது. இதேபோன்று மத்திய அரசும், நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சுப்பா ராவ், நேற்று தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|