பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ரூ.7,000 ஆக அதிகரிப்புபீப்பாய் கச்சா எண்ணெய் விலை ரூ.7,000 ஆக அதிகரிப்பு ... ரூபாய் மதிப்பில் மீண்டும் சரிவு: 67.31 ரூபாய் மதிப்பில் மீண்டும் சரிவு: 67.31 ...
உணவு பாதுகாப்பு திட்டத்தால் பொருளாதாரம் பாதிப்படையும் தர குறியீட்டு நிறுவனம் "மூடீஸ்' கருத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2013
02:06

புதுடில்லி:உணவு பாதுகாப்பு மசோதாவால், மத்திய அரசின், நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகும் என,சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடீஸ் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, மிகக் குறைந்த விலையில், அரிசி, கோதுமை மற்றும் உணவு தானியங்களை மக்களுக்கு அளிக்கும் வகையில், உணவு பாதுகாப்பு மசோதாவை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்திற்கு, பார்லிமென்டில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
நிதிச்சுமை:இத்திட்டம் அமல்படுத்தும் நிலையில், அது, மத்திய அரசின் நிதிச் ”மையை அதிகரிப்பதுடன், இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என, மூடீஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.உணவு பாதுகாப்பு திட்டத்தால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), உணவு மானியத்திற்கான ஆண்டு செலவினம், 1.2சதவீதமாக அதிகரிக்கும். இது தற்போது, 0.8சதவீதம் என்ற அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 82 கோடி இந்திய மக்களுக்கு, மிகக் குறைந்த விலையில், உணவு தானியங்கள் வழங்கப்படும். இது, உலகளவில், மிகப் பெரிய திட்டமாகக் கருதப்படுகிறது.
பணவீக்கம்:தற்போதைய நிலவரப்படி, இந்த உணவு பாதுகாப்பு திட்டம் அமல்படுத்தப்படும் நிலையில், அதனால், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 1.30 லட்சம் கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும்.நடப்பு நிதியாண்டின் எஞ்சிஉள்ள மாதங்களுக்கு, இத்திட்டத்தின் மூலம், 90 ஆயிரம் கோடி ரூபாய் நிதிச்சுமை ஏற்படும். இதில், 10 ஆயிரம் கோடி ரூபாய் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காக செலவிடப்படும் என, அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் தற்போதைய மானியச் சுமையால், நாட்டின் பொது பணவீக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், இத்திட்டம் முழு அளவில் நடைமுறைக்கு வரும் போது, அது, பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதுடன், நிதிப் பற்றாக்குறையையும் உயர்த்தி விடும் என, மூடீஸ் நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான தேவையை பூர்த்தி செய்ய, அதிகளவில் இறக்குமதி மேற்கொள்ளப்பட வேண்டும். இதனால், நிதிச் ”மை அதிகரித்து, நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் உயர வழிவகுக்கும்.
கடந்த ஒரு சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புசரிவடைந்து வருகிறது. குறிப்பாக, நடப்பாண்டில் இதுவரையிலுமாக, ரூபாய் மதிப்பு, 25சதவீதம் சரிவடைந்துள்ளது. நேற்று முன்தினம், வரலாறு காணாத அளவிற்கு ரூபாய் மதிப்பு, 68.80 ஆக வீழ்ச்சி கண்டது. உணவு பாதுகாப்பு திட்டத்தின் படி, கிராமப்புற மக்களுக்கு, 75சதவீத அளவிற்கும், நகர்ப்புற மக்களுக்கு, 50சதவீத அளவிற்கும் உணவு தானியங்களை, மத்திய அரசு, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.
தர குறியீடு:மூடீஸ் நிறுவனம், தற்போது இந்தியாவிற்கு, "பீஏஏ3' என்ற தரக்குறியீட்டை அளித்துள்ளது. அதாவது, இந்தியா, நிலையான பொருளாதாரம் மற்றும் மிதமான கடன் இடர்ப்பாட்டை கொண்டுள்ளது என்பதாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)