தங்கம் விலை சவரனுக்கு ரூ.416 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.416 குறைவு ... புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிட திட்டம் புதிய 100 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிட திட்டம் ...
ரூபாய் மதிப்பு சரிவால் விலைவாசி உயரலாம் : பார்லி.,யில் பிரதமர் விளக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2013
12:27

புதுடில்லி : நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் லோக்சபாவில் இன்று விளக்கம் அளித்தார். கடும் அமளிக்கு இடையே உரையாற்றி பிரதமர் கூறியதாவது : அமெரிக்க டாலரில் ஏற்றம் ஏற்பட்டதால் இந்தியா ரூபாய் உள்ளி உலக நாடுகளின் நாணய மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது; இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு கவலை அளிக்கிறது; எதிர்பாராத வெளிநாட்டு சூழ்நிலை காரணமாகவே ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது; சிரியா மீது அமெரிக்கா போர் தொடுக்க திட்டமிட்டுள்ளதும் ரூபாயின் மதிப்பு சரிவிற்கு காரணம்; அமெரிக்க மத்திய வங்கியின் முடிவால் வளரும் நாடுகளில் இருந்து டாலர் வெளியேறுகிறது; சூழ்நிலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது; ஏற்றுமதி நிலையை சீர்படுத்த கூடுதல் நடவடிக்கை தேவைப்படுகிறது; ரூபாய் வீழ்ச்சி எதிர்பாராத ஒன்று; தங்கம் மற்றும் எண்ணெய் தேவையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது; தற்போது ரூபாய் மதிப்பு சரிவால் பொருளாதார கொள்கைகளை திரும்பப் பெறும் பேச்சிற்கே இடமில்லை; நடப்பு கணக்கு பற்றாக்குறையை 70 மில்லியன் டாலருக்கு குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது; ரூபாய் மதிப்பு சரிவால் பல துறைகள் பயனடைந்து வருகின்றன; நடப்பு பற்றாக்குறையும் ரூபாய் சரிவிற்கு காரணம்;நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையை மாற்று நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது; நடப்பு காலாண்டின் துவக்கத்தில் வளர்ச்சி பழையநிலையிலேயே இருக்கும்; இனி வரும் காலாண்டுகளில் வளர்ச்சி வேகம் பெறும்; பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது; மானியங்கள் மற்றும் பிற செலவீனங்களை கவனமாக கையாள வேண்டும்; இந்திய வங்கிகள் சர்வதேச வங்கிகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளது; ரூபாயின் மதிப்பு சரிவால் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது; போதிய அளவு பருவமழை பெய்து வருவதால் உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)