ஹெல்மெட் தயாரிப்பில் டைட்டான்ஹெல்மெட் தயாரிப்பில் டைட்டான் ... நடப்பு ஆண்டு கரீப் பருவத்தில் சாகுபடி பரப்பளவு 10 கோடி ஹெக்டேராக அதிகரிப்பு நடப்பு ஆண்டு கரீப் பருவத்தில் சாகுபடி பரப்பளவு 10 கோடி ஹெக்டேராக ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பழைய தங்கம் வாங்கும் திட்டம் இல்லை:ரிசர்வ் வங்கி மறுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2013
00:12

மும்பை: தங்க நகைகளை வாங்கி, தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த இரு தினங்களாக, கோவில், அறக்கட்டளை உட்பட, மக்களிடம் தேங்கிக் கிடக்கும் தங்க ஆபரணங்களை வாங்குவது குறித்து, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக, பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. தங்க கட்டிகள்:இவ்வாறு வாங்கப்படும் தங்க நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றவும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.
தற்போது, அப்படிப்பட்ட யோசனை எதுவும் ரிசர்வ் வங்கியின் பரிசீலனையில் இல்லை. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்கம் இறக்குமதி அதிகரித்ததால், சென்ற நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.8 சதவீதமாக (8,820 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.இதை, நடப்பு நிதியாண்டில், 3.7 சதவீதமாக (7,000 கோடி டாலர்) குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சுங்க வரி:நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், தங்கம் இறக்குமதி, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 87 சதவீதம் உயர்ந்து, 205 டன்னில் இருந்து, 383 டன்னாக உயர்ந்து உள்ளது. இது, மதிப்பின் அடிப்படையில், 68 சதவீதம் அதிகரித்து, 56,488 கோடியில் இருந்து, 95,092 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு, அதன் மீதான சுங்க வரியை, நடப்புஆண்டில் மூன்று முறை உயர்த்தி, அண்மையில், 10 சதவீதமாக அதிகரித்தது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)