பதிவு செய்த நாள்
01 செப்2013
00:12
மும்பை: தங்க நகைகளை வாங்கி, தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த இரு தினங்களாக, கோவில், அறக்கட்டளை உட்பட, மக்களிடம் தேங்கிக் கிடக்கும் தங்க ஆபரணங்களை வாங்குவது குறித்து, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக, பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. தங்க கட்டிகள்:இவ்வாறு வாங்கப்படும் தங்க நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றவும், ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவியுள்ளன.
தற்போது, அப்படிப்பட்ட யோசனை எதுவும் ரிசர்வ் வங்கியின் பரிசீலனையில் இல்லை. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்கம் இறக்குமதி அதிகரித்ததால், சென்ற நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, 4.8 சதவீதமாக (8,820 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.இதை, நடப்பு நிதியாண்டில், 3.7 சதவீதமாக (7,000 கோடி டாலர்) குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சுங்க வரி:நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், தங்கம் இறக்குமதி, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 87 சதவீதம் உயர்ந்து, 205 டன்னில் இருந்து, 383 டன்னாக உயர்ந்து உள்ளது. இது, மதிப்பின் அடிப்படையில், 68 சதவீதம் அதிகரித்து, 56,488 கோடியில் இருந்து, 95,092 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.தங்கம் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு, அதன் மீதான சுங்க வரியை, நடப்புஆண்டில் மூன்று முறை உயர்த்தி, அண்மையில், 10 சதவீதமாக அதிகரித்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|