பதிவு செய்த நாள்
02 செப்2013
00:30
புதுடில்லி:மத்திய அரசின் நேரடி வரி வசூல், நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், 1.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில், வசூலிக்கப்பட்ட தொகையை விட, 12 சதவீதம் அதிகம் என, வருமான வரி துறை தெரிவித்து உள்ளது.ஆகஸ்ட் 29ம் தேதி வரையிலான, ஐந்து மாத காலத்தில், திரட்டப்பட்ட மொத்த நேரடி வரி வசூலில், நிறுவனங்கள் செலுத்திய வரி, 70 ஆயிரம் கோடி ரூபாயாகவும், வருமான வரி, 67 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உள்ளது.நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, நேரடி வரி வசூல் மூலம், 6.68 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த இலக்கு எட்டப்படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.
பொதுவாக, செப்டம்பர் 15ம் தேதி செலுத்தப்பட உள்ள முன்கூட்டிய வரி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அதன்பிறகே, வரி வசூல் குறித்த உண்மையான நிலவரம் தெரிய வரும் என, வருமான வரி துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஒட்டு மொத்த அளவில், இதுவரை திரட்டப்பட்ட நேரடி வரி வசூலில், மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்நகரத்தின் பங்களிப்பு, மொத்த வரி வசூலில், 35-40 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, நடப்பாண்டில், மும்பையின் நேரடி வரி வசூல், 13.5 சதவீதம் அதிகரித்து, 40,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதமாக வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி வரி வசூல் இலக்கு எட்டப்படாத நிலையில், அது அரசின் நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|