நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 108 கோடி டாலர் சரிவுநாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 108 கோடி டாலர் சரிவு ... வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் மாட்டிறைச்சி முன்னிலை:பாசுமதி அரிசியுடன் போட்டி போடுகிறது வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் மாட்டிறைச்சி முன்னிலை:பாசுமதி அரிசியுடன் ... ...
நாட்டின் நேரடி வரி வசூல்ரூ.1.40 லட்சம் கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2013
00:30

புதுடில்லி:மத்திய அரசின் நேரடி வரி வசூல், நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் வரையிலான, ஐந்து மாத காலத்தில், 1.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில், வசூலிக்கப்பட்ட தொகையை விட, 12 சதவீதம் அதிகம் என, வருமான வரி துறை தெரிவித்து உள்ளது.ஆகஸ்ட் 29ம் தேதி வரையிலான, ஐந்து மாத காலத்தில், திரட்டப்பட்ட மொத்த நேரடி வரி வசூலில், நிறுவனங்கள் செலுத்திய வரி, 70 ஆயிரம் கோடி ரூபாயாகவும், வருமான வரி, 67 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உள்ளது.நடப்பு நிதியாண்டில், மத்திய அரசு, நேரடி வரி வசூல் மூலம், 6.68 லட்சம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த இலக்கு எட்டப்படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.
பொதுவாக, செப்டம்பர் 15ம் தேதி செலுத்தப்பட உள்ள முன்கூட்டிய வரி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அதன்பிறகே, வரி வசூல் குறித்த உண்மையான நிலவரம் தெரிய வரும் என, வருமான வரி துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஒட்டு மொத்த அளவில், இதுவரை திரட்டப்பட்ட நேரடி வரி வசூலில், மும்பை முதலிடத்தில் உள்ளது. இந்நகரத்தின் பங்களிப்பு, மொத்த வரி வசூலில், 35-40 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, நடப்பாண்டில், மும்பையின் நேரடி வரி வசூல், 13.5 சதவீதம் அதிகரித்து, 40,200 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதமாக வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேரடி வரி வசூல் இலக்கு எட்டப்படாத நிலையில், அது அரசின் நிதி பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)