பதிவு செய்த நாள்
02 செப்2013
00:36
மும்பை:சென்ற ஜூலையில், வங்கிகளின் சில்லறை கடன், 17 சதவீதம் அதிகரித்து, 9.42 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற 2012ம் ஆண்டு, இதே மாதத்தில், 8.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
இது குறித்து ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:வங்கிகளின் சில்லறை கடன், கடந்த ஆண்டு, ஜூலையில் காணப்பட்டதை விட, நடப்பாண்டு ஜூலையில், 1,36,830 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.வங்கிகளின் சில்லறை கடன் பிரிவில், வீட்டு வசதிக் கடன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டு உள்ளது.
சென்ற ஜூலையில், வங்கிகளின் வீட்டு வசதிக் கடன், 18.4 சதவீதம் அதிகரித்து, 4,90,455 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 11 சதவீதமாக இருந்தது. அதே சமயம், இதே காலத்தில், வங்கிகளின் உணவு சாரா கடன் வளர்ச்சி, 16.6 சதவீதத்தில் இருந்து, 14.8 சதவீதமாக சரிவடைந்துள்ளது.இதே காலத்தில், தொழில்துறை கடன் வளர்ச்சி, 15.9 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து, 19,64,954 கோடியில் இருந்து, 22,07,362 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.இதில், குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் வளர்ச்சி, 20.3 சதவீதம் உயர்ந்து, 2,41,837 கோடியில் இருந்து, 2,90,955 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அது போன்று, பெருந்தொழில்களுக்கான கடன் வளர்ச்சி, 16.7 சதவீதம் அதிகரித்து, 15,89,857 கோடியில் இருந்து, 18,54,619 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இருந்தபோதிலும், நடுத்தர தொழில்களுக்கான கடன் வளர்ச்சி, 1.1 சதவீதம் குறைந்து, 1,33,260 கோடியில் இருந்து, 1,31,788 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.உணவு பதப்படுத்துதல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், சிமென்ட் மற்றும் சிமென்ட் பொருட்கள், மரம் மற்றும் மரப் பொருட்கள், அடிப்படை கட்டமைப்பு, ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள், காகிதம், ஜவுளி, தோல் மற்றும் தோல் பொருட்கள், குளிர்பானங்கள் மற்றும் புகையிலை ஆகிய துறைகளுக்கான வங்கிக் கடன் வளர்ச்சி அதிகரித்துள்ளது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|