பதிவு செய்த நாள்
02 செப்2013
00:36
நாமக்கல்:தமிழகம், கேரளாவில் முட்டை விலை, 335 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.நாமக்கல்லில் நடைபெற்ற, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை உற்பத்தி, சந்தை நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 333 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, இரண்டு காசுகள் உயர்த்தி, 335 காசுகளாக நிர்ணயம் செய்வதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தற்போது, முட்டைக்கான தேவை அதிகரித்து உள்ளதால், அதன் விலையும் உயர்ந்து வருகிறது.
இது, பண்ணையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.நாட்டின் பிற மண்டலங்களில், முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 335, பெங்களூரு, 315, மைசூரு, 315, ஐதராபாத், 301, மும்பை, 330, விஜயவாடா, 315, கோல்கட்டா, 355, பர்வாலா, 315, டில்லி, 328.நாமக்கல்லில் நடைபெற்ற, பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், 1 கிலோ முட்டைக் கோழியின் விலை, 60 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை கிலோ, 70 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|