உற்பத்தி செலவு அதிகரிப்பால் "டாஸ்மாக்' மதுபானம் விலை உயருகிறதுஉற்பத்தி செலவு அதிகரிப்பால் "டாஸ்மாக்' மதுபானம் விலை உயருகிறது ... ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் நாளை மறுநாள் ஓய்வு பெறுகிறார் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் நாளை மறுநாள் ஓய்வு பெறுகிறார் ...
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி விரைவில் 10 சதவீதம் உயர்கிறது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2013
09:43

புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதற்கான, அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில், தற்போது, 80 சதவீதம் அகவிலைப்படியாக உள்ளது. இதை, 10 சதவீதம் உயர்த்தி, 90 சதவீதமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இதுகுறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இது, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். தொழிற்சாலை ஊழியர்களுக்கான, இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண், அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது.இதன்படி, ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட தொழிலாளர்களுக்கான சில்லரை பணவீக்க அடிப்படையில், மத்திய நிதி அமைச்சகம் திட்ட முன் வடிவை தயாரித்து, இம்மாதம் அனுப்புகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், முறையான அறிவிப்பு வெளியாகும்.இரட்டை இலக்க அகவிலைப்படி உயர்வு, மூன்று ஆண்டுக்கு பின் இப்போதுதான் அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன், 2010ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

கடந்த, ஜனவரி முதல் அமலுக்கு வந்த, 8 சதவீத அகவிலைப்படி உயர்வால், 72 சதவீதத்தில், இருந்து, 80 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது, 10 சதவீதமானால், 90 சதவீதத்தை எட்டும். இதனால், 50 லட்சம் அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர். பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில், இந்த அறிவிப்பிற்காக, அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)