பதிவு செய்த நாள்
02 செப்2013
14:02
ராமாநாதபுரம்:கேரள மீன் வரத்து அதிகரிப்பால், ராமேஸ்வரத்தில் கருவாடு விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினர் கெடுபிடி, மீனவர்கள் ஸ்டிரைக் போன்ற பல காரணங்களால், ராமேஸ்வரம் மீனவர்கள் தொழிலுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், மீன் வரத்து குறைந்து, கருவாடு விலை உச்சத்தில் இருந்தது.
இந்நிலையில், சில வாரங்களாக கேரள பகுதியில் இருந்து மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, கருவாடு விலை சற்று குறைந்து வருகிறது. விலை விபரம் (கிலோ): கடந்த வாரம் 280 ரூபாய்க்கு விற்ற சீலா (நெய் மீன்) கருவாடு 260 க்கும், 120 க்கு விற்ற நகர 110 க்கும், 130 க்கு விற்ற வில மீன் 120 க்கும், 160 க்கு விற்ற பாறை 150 க்கும், 200 க்கு விற்ற நெத்திலி 190 க்கும், 120 க்கு விற்ற கத்தாழை 110 க்கும், 60 க்கு விற்ற காரல் 40 க்கும், 40 க்கு விற்ற சூடை 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|