பதிவு செய்த நாள்
03 செப்2013
01:36
திருப்பூர்:திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவராக, சக்திவேல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தேர்தல், சமீபத்தில் நடந்தது. சக்திவேல் தலைமையிலான அணியினரை எதிர்த்து, ராஜா சண்முகம் அணியினர், அனைத்து பதவிகளுக்கும் போட்டியிட்டனர். பழைய உறுப்பினர்கள், 720 பேர், புதிய உறுப்பினர்கள், 171 பேர் என, 891 பேர் ஓட்டுரிமை பெற்றனர்.சங்கம் துவக்கி, 23 ஆண்டுகளில், ஏதேனும் ஓரிரு பதவிகளுக்கு மட்டுமே போட்டி இருந்தது.
இத்தேர்தலில், தலைவர் பதவி உட்பட, அனைத்து பதவிக்கும், 54 பேர் போட்டியிட்டனர். சங்க உறுப்பினர்களில், 805 பேர் ஓட்டளித்தனர்.தேர்தல் முடிவுகளை, தேர்தல் அதிகாரி ராமமூர்த்தி அறிவித்தார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜா சண்முகத்தை விட, 32 ஓட்டுகள் அதிகம் பெற்று மீண்டும் தலைவர் பதவியை கைப்பற்றினார் சக்திவேல்.நிர்வாகக் குழுவில், நான்கு பதவிகள், செயற்குழுவில், 13 உறுப்பினர் பதவிகளை, சக்திவேல் அணியினர் கைப்பற்றியுள்ளனர். நிர்வாகக் குழுவில், மூன்று பதவிகள், செயற்குழுவில், ஏழு என, 10 பதவிகளை, ராஜா சண்முகம் அணியினர் பிடித்தனர்.இதைத்தொடர்ந்து, புதிய தலைவர் சக்திவேல் தலைமையில், ஆண்டு பொதுக்குழு கூட்டம் கூடியது. இதில், ராஜா சண்முகம் அணியினர் யாரும் பங்கேற்கவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|