பதிவு செய்த நாள்
03 செப்2013
01:46
புதுடில்லி:வரும், 2013-14ம் பருவத்தில், நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 1 கோடி பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) இருக்கும் என, இந்திய பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில், பருத்தி பருவம் என்பது, அக்டோபர் முதல் செப்டம்பர் வரை கணக்கிடப்படுகிறது. இவ்வகையில், நடப்பு பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தி, 3.55 கோடி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.அதேசமயம், நாட்டின் பல மாநிலங்களில், மழை பொழிவு நல்ல அளவில் உள்ளதால், எதிர்வரும், 2013-14ம் பருவத்தில், பருத்தி உற்பத்தி, 3.72 கோடி பொதிகளாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், நம்நாட்டிலிருந்து, அதிகளவில் பருத்தி இறக்குமதி செய்து கொள்ளும் சீனாவில், இதன் கையிருப்பு அதிகமாக இருப்பதுடன், பருத்திக்கான தேவையும் குறைந்துள்ளது. இதனால், எதிர்வரும் பருவத்தில், இதன் ஏற்றுமதி அதிக ஏற்ற, இறக்கமின்றி, ஒரு கோடி பொதிகளாக தான் இருக்கும் என, இந்திய பருத்தி கூட்டமைப்பின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|