பதிவு செய்த நாள்
03 செப்2013
01:56
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், 3.17 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட, 3.27 கோடி டன் இலக்கு அளவை விட, குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், இந்நிறுவனம், 17.30 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் இக்காலத்தில், இந்நிறுவனம், 16.70 கோடி டன் நிலக்கரியை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது.
இதே காலத்தில், இந்நிறுவனம், 19.24 கோடி டன் நிலக்கரியை விற்பனை செய்ய, இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், 18.86 கோடி டன் நிலக்கரி மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளது.நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில், 80 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள இந்நிறுவனம், கடந்த நிதியாண்டில், 46.40 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், 45.25 கோடி டன் நிலக்கரி மட்டுமே உற்பத்தி செய்தது.நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், இந்நிறுவனம், 48.20 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|