பதிவு செய்த நாள்
03 செப்2013
01:59
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் துவக்க தினமான நேற்று, மிகவும் சிறப்பாக இருந்தது. சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரம் நன்கு இருந்ததைஅடுத்து, "சென்செக்ஸ்' 1.43 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தது.சீனாவின் தயாரிப்பு துறையின் உற்பத்தி, எதிர்பார்ப்பை விட உயர்ந்து உள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், உலோகம், நுகர்பொருட்கள், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 266.41 புள்ளிகள் அதிகரித்து, 18,886.13 புள்ளிகளில் நிலை பெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,942.06 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,678.93 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா ஸ்டீல், மாருதி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், மகிந்திரா, டாட்டா பவர், இன்போசிஸ் உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 78.95 புள்ளிகள் உயர்ந்து, 5,550.75 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,564.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,478.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|