பதிவு செய்த நாள்
03 செப்2013
09:52
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.79 புள்ளிகள் அதிகரித்து 18900.92 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 1 புள்ளிகள் குறைந்து 5549.75 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் துவக்க தினமான நேற்று, மிகவும் சிறப்பாக இருந்தது. சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரம் நன்கு இருந்ததை அடுத்து, 'சென்செக்ஸ்' 1.43 சதவீதம் உயர்வுடன் முடிவடைந்தது.சீனாவின் தயாரிப்பு துறையின் உற்பத்தி, எதிர்பார்ப்பை விட உயர்ந்து உள்ளது என்ற செய்தியால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. நேற்றைய வியாபாரத்தில், உலோகம், நுகர்பொருட்கள், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.66.28 ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|