பதிவு செய்த நாள்
03 செப்2013
10:25
மும்பை : வாரத்தின் இரண்டாம் நாளான இன்று(செப்.,3ம் தேதி, செவ்வாய்கிழமை) ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 காசுகள் சரிந்து ரூ.66.50-ஆக இருந்தது. தொடர்ந்து சரிய தொடங்கிய ரூபாயின் மதிப்பு மீண்டும் 68-ஐ எட்டியது. 03.00 மணியளவில் ரூபாயின் மதிப்பு ரூ.68.08-ஆக சரிந்தது. பின்னர் வர்த்தகநேர முடிவில் ரூ.67.63-ஆக முடிந்தது. முன்னதாக நேற்று வர்த்தகநேர முடிவில் ரூபாயின் மதிப்பு ரூ.66.00-ஆக இருந்தது.
இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், யூரோ மற்றும் யென்னுக்கு எதிரான டாலர் மதிப்பு உயர்ந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவால் இந்திய பங்குசந்தைகளும் சரிந்தன. லாபநோக்கோடு முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்பனை செய்ததால் சென்செக்ஸ் 650 புள்ளிகளும், நிப்டி 200 புள்ளிகளும் சரிந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|