பதிவு செய்த நாள்
04 செப்2013
00:30
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம், நோக்கியோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செல்போன் தயாரிப்பு வர்த்தகத்தை, 717கோடி டாலருக்கு (45 ஆயிரம் கோடி ரூபாய் கையகப்படுத்துகிறது.
இதையடுத்து, நோக்கியோ நிறுவனத்தின் செல்போன் பிரிவை சேர்ந்த, 32 ஆயிரம் பணியாளர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் மாற்றப்பட உள்ளனர்.இதில், பின்லாந்தில் உள்ளநோக்கியோ செல்போன் தொழிற்சாலையைசேர்ந்த, 18,300 தொழிலாளர்களும், 4,700 அலுவலர்களும் அடங்குவர்.
நோக்கியோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்தும், நிர்வாக இயக்குனர்கள் குழுவில் இருந்தும் ஸ்டீபன் எலோப் ராஜினாமா செய்கிறார். இருந்தபோதிலும், அவர் நிறுவனத்தின்,சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் செயல் துணை தலைவராக பொறுப்பேற்பார் என, தெரிகிறது.
நோக்கியோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இடைக்கால தலைவராக, டிமோ இஹாமோடில்லா பொறுப்பேற்பார். இந்த விற்பனை மூலம், 320கோடி யூரோ லாபம் கிடைக்கும் என, எதிர்பார்ப்பதாக,நோக்கியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில்நோக்கியோ நிறுவனத்தின் செல்போன் பிரிவு, நிகர விற்பனையின் மூலம், 1,490 கோடி யூரோவை (1.34 லட்சம் கோடி ரூபாய்) விற்றுமுதலாக ஈட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|