பதிவு செய்த நாள்
04 செப்2013
00:32
மும்பை:ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக, ரகுராம் ராஜன், 50 இன்று பொறுப்பேற்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவி வகித்த டீ.சுப்பாராவ் ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து, கடந்த மூன்று வார காலமாக, ரிசர்வ் வங்கியின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய, ரகுராம் ராஜன், அதிகாரபூர்வமாக ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவியேற்கிறார்.பன்னாட்டு நிதியத்தின், முன்னாள் பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன், கடந்த ஆகஸ்ட் மாதம், நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்புபோன்ற பல்வேறு சவால்களை ரகுராம் ராஜன் எதிர்கொள்ளவேண்டியுள்ளது.புதிய பொறுப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாடு எதிர்நோக்கியுள்ள அனைத்து சவால்களையும் சமாளிக்கும் மந்திரக்கோல் எதுவும் என்னிடம் இல்லை. இருந்தபோதிலும், அவற்றுக்கு, ஒவ்வொன்றாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். நம்மிடம்போதுமான திட்டங்கள் உள்ளன. இதில் கரன்சி மட்டுமின்றி, நிதி மற்றும் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|