பதிவு செய்த நாள்
04 செப்2013
00:38
புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டு தொழில் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 4.5 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.
கச்சா எண்ணெய்:கணக்கீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளின் உற்பத்தி மிகவும் பின்னடைவை கண்டதையடுத்து, ஒட்டு மொத்த முக்கிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி குறைந்துபோயுள்ளதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜூலை மாதத்தில், முக்கிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 0.1 சதவீதம் உயர்ந்துள்ளது.சென்ற ஜூலையில், கச்சா எண்ணெய் உற்பத்தி, மைனஸ் 2.3 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூலையில், மைனஸ் 0.7 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.
இதேபோன்று இயற்கை எரிவாயு உற்பத்தி, மைனஸ் 13.05 சதவீதத்திலிருந்து, மைனஸ் 16.1 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்து உள்ளது.நாட்டின் ஒட்டு மொத்த தொழில்துறை உற்பத்தியில்,மேற்கண்ட எட்டு துறைகளின் பங்களிப்பு, 38 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
கணக்கீட்டு மாதத்தில், நிலக்கரி துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2 சதவீதம் என்ற அளவில் இருந்து, 1.2 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. அதேசமயம், உர துறையின் உற்பத்தி, மைனஸ் 2.2 சதவீதம் என்ற அளவில்இருந்து, 0.4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.சிமென்ட் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 3.2 சதவீதம் என்ற அளவில் இருந்து, 0.8 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.
பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 26 சதவீதம் என்ற அளவிலிருந்து,5.1 சதவீதம் என்ற அளவில் சரிவடைந்து உள்ளது.அதேசமயம்,உருக்கு துறையின் உற்பத்தி வளர்ச்சி,1.1 சதவீதம் என்ற அளவிலிருந்து, 7 சதவீதம் என்ற அளவிலும், மின் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 2.7 சதவீதம் என்ற அளவிலிருந்து, 5.2 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளன.
புள்ளிவிவரம்:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, கடந்தாண்டின் இதே காலத்தை விட, 6.3 சதவீதம் என்ற அளவிலிருந்து, 1.9 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது.கடந்த 2012-13ம் நிதியாண்டில்,மேற்கண்ட முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.9 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 5 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, அரசின் புள்ளிவிவரத்தில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|