பதிவு செய்த நாள்
04 செப்2013
00:40
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம்,நேற்று மிகவும்மோசமாக இருந்தது. சென்ற ஜூலை மாதத்தில் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி குறைந்துபோனது மற்றும் அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில்மேற்கொண்ட முதலீட்டை அதிகளவில் விலக்கி கொண்டதுபோன்றவற்றால், "சென்செக்ஸ்' ஒரே நாளில், 651 புள்ளிகளை (3.45 சதவீதம்) இழந்தது.
அமெரிக்காவின் தயாரிப்பு துறை, புள்ளி விவரங்களை எதிர்பார்த்து, ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் ”ணக்கமாகவே இருந்தது. அதேசமயம், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட், நுகர்பொருட்கள் உள்ளிட்ட, அனைத்து துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 651.47 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,234.66 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,007.31 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,166.17 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹீரோமோட்டோகார்ப், ரிலையன்ஸ், ஐ.டி.சி., உள்ளிட்ட, 28 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தன. எனினும்,கோல் இந்தியா மற்றும் மகிந்திரா ஆகிய இரு நிறுவனப் பங்குகள் மட்டும் விலை உயர்ந்து காணப்பட்டன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 209.30 புள்ளிகள் சரிவுஅடைந்து, 5,341.45 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,580.95 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,166.17 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|