பதிவு செய்த நாள்
04 செப்2013
00:41
புதுடில்லி:உள்நாட்டில், 1 கிலோ வெங்காயத்தின் விலை, 60 - 70 ரூபாய் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், தென் மாநிலங்களில் இருந்து, புதிய வெங்காயம் வரத்து அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டையடுத்து, வரும் வாரங்களில் இதன் விலை குறைய வாய்ப்புள்ளது என, மத்திய அர” தெரிவித்துள்ளது.
பாதிப்பு:கடந்த ஒன்றரை மாத காலத்தில், வெங்காயத்தின் விலை ராக்கெட்வேகமெடுத்து, கிலோ ஒன்று, 80 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இது, நுகர்வோருக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, மத்திய அர”, வெங்காய ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, தாராளமாக இறக்குமதி செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.
இதுகுறித்து,வேளாண் செயலர் ஆஷிஷ்பகுனா கூறுகையில்,"ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து, சந்தைக்கு புதிய வெங்காயம் வரத் துவங்கியுள்ளது. இதையடுத்து, வரும் வாரங் களில், இதன் விலை குறைய வாய்ப்புள்ளது'' என்று தெரிவித்தார்.நடப்பாண்டில், நாட்டின் வெங்காயம் உற்பத்தி, 166.55 லட்சம் டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களின் பங்களிப்பு, 38 - 40 லட்சம் டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஒரு மாத காலத்தில், பெங்களூரு, மொத்த விலை சந்தைக்கு, வெங்காயம் வரத்து மூன்று மடங்கு அதிகரித்து, 30 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. ஐதராபாத் சந்தையில், 10 ஆயிரம் டன் வெங்காயம் வரத்தாகியுள்ளது என,
அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் குறைந்தது:சென்னைகோயம்பேடு சந்தைக்கு, ஆந்திரா, மகராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து, புதிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை, 40-50 ரூபாய் என்ற அளவில் குறைந்துள்ளது.மேலும், ஒரு கிலோ சின்ன வெங்காயம், 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|