பதிவு செய்த நாள்
04 செப்2013
12:27
புதுடில்லி : சர்வதேச நிதிக்கொள்கையில் வழக்கத்தில் இல்லாத நடைமுறைகளை வளர்ந்த நாடுகள் தவிர்க்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். ரூபாயின் மதிப்பில் தொடர் சரிவு காரணமாக இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடப்பு கணக்கு பற்றாகுறை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு அதனால் மற்ற பொருட்களின் விலையேற்றம் என நாடு ஒரு பொருளாதார சிக்கலை எதிர்நோக்கி உள்ளது. இதனை தடுக்க மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று ரஷ்யா புறப்பட்டார். அதற்கு முன்னதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலீடுகள் அதிகளவு வெளியேறுவதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. சர்வதேச நிதிக்கொள்கையில் வழக்கில் இல்லாத நடைமுறைகளை வளர்ந்த நாடுகள் தவிர்க்க வேண்டும். இது போன்ற நிதிக்கொள்கைகளால், வளரும் நாடுகளின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறினார். மேலும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், ரூபாய் மதிப்பை நிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|