வளர்ந்த நாடுகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்...!!வளர்ந்த நாடுகளுக்கு பிரதமர் வலியுறுத்தல்...!! ... ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் பதவியேற்பு ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் பதவியேற்பு ...
வர்த்தக சிலிண்டர் விலை ரூ.100 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2013
12:31

வர்த்தக பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விலை, 100 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,752 ரூபாயாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர், வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் என, இரண்டு வகை காஸ் சிலிண்டர்களை, வினியோகம் செய்து வருகின்றன. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாறுதலுக்கு ஏற்ப, மாதந்தோறும், வர்த்தக பயன்பாடு மற்றும் மானியம் அல்லாத வீட்டு உபயோக சிலிண்டர் விலை, மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம், சென்னையில், வர்த்தக பயன்பாட்டிற்கான, சிலிண்டர் விலை, 1,652 ரூபாய் என்ற அளவில் இருந்தது. தற்போது இதன் விலை, 100 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1,752 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும், மானியம் அல்லாத காஸ் சிலிண்டர் விலை, 59 ரூபாய் அதிகரித்து, 930 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்துடன் கூடிய, சிலிண்டரின் விலை, 398 ரூபாயாக உள்ளது.

"உணவு பொருட்கள் விலை உயர்த்தப்படாது' இதுகுறித்து, ஓட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது: காய்கறி, மளிகை உள்ளிட்ட மூல பொருட்கள் விலை உயர்வால், ஓட்டல் நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள், சிலிண்டர் விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றன. இதனால், உணவு பொருட்கள் விலையை உயர்த்த வேண்டிய நிர்பந்தம், ஓட்டல்களுக்கு ஏற்படுகிறது. கூடுதல் செலவை சமாளிக்க விலையை உயர்த்தினால், வாடிக்கையாளர்கள் வருவதில்லை. இதனால், சிலிண்டர் விலை உயர்வை காரணமாக வைத்து, உணவு பொருட்கள் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)