பதிவு செய்த நாள்
04 செப்2013
17:57
மும்பை : சுப்பாராவ்வின் பதவிகாலம் முடிவடைந்ததைத்தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் ராஜன் இன்று(செப்.,4ம் தேதி) பதவியேற்று கொண்டார். பின்னர் தான் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம், தற்போது நாடு கடுமையான சவாலை எதிர்நோக்கியுள்ளது. இந்த சூழலில் நான் பொறுப்பேற்று உள்ளது எனக்கு அதிக பொறுப்புகளை கொடுத்துள்ளது. ஆனபோதும் நாட்டின் பொருளாதார நிலை சீராகவே உள்ளது. ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கை செப் 20ம் தேதி வெளியிடப்படும். புதிய வங்கி தொடங்குவது தொடர்பான லைசென்ஸ் விரைவில் வழங்கப்படும். இதுதொடர்பாக பிமால் ஜலான் கமிட்டி இந்த வேலைகளை செய்து வருகிறது. வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் புதிதாக கிளை தொடங்க ஊக்கம் அளிக்கப்படும். பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|