பதிவு செய்த நாள்
05 செப்2013
00:43
மும்பை:நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. நேற்று முன்தினம் ரூபாய் மதிப்பு, 67.73 ஆக இருந்தது.நேற்று, செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட சரிவடைந்தது. இது, ஒரு கட்டத்தில், 68.62 ஆக கடும் வீழ்ச்சி கண்டது. கடந்த ஆகஸ்ட், 28ம் தேதி, ரூபாய் மதிப்பு, வர்த்தகத்தின் இடையே வரலாறு காணாத வகையில், 68.85 ஆக சரிவடைந்தது. அதை நெருங்கும் வகையில், நேற்று ரூபாய் மதிப்பில் சரிவு காணப்பட்டது.
இதையடுத்து, ரிசர்வ் வங்கி, உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அன்னியச் செலாவணி வரத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, வெளிநாடுகளில் முதலீடு செய்யும் இந்திய நிறுவனங்கள், அவற்றின் சொத்து மதிப்பில், 400 சதவீத அளவிற்கு, அயல்நாட்டு வர்த்தக கடன்களை பெறலாம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இத்தகைய சாதகமான ‹ழலும், ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக ரகுராம் ராஜன் பதவி யேற்றதும், பங்குச் சந்தையில் காணப்பட்ட முன்னேற்றமும், ரூபாய் மதிப்பை உயர்த்த உதவின. நேற்று, வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 64 காசுகள் அதிகரித்து, 67.09ல் நிலை பெற்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|