நாட்டின் மலர்கள் ஏற்றுமதி ரூ.423 கோடியாக வளர்ச்சிநாட்டின் மலர்கள் ஏற்றுமதி ரூ.423 கோடியாக வளர்ச்சி ... புதிய ஓய்வூதிய மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது புதிய ஓய்வூதிய மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ்' 290 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2013
00:22

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம்,வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்றும் சிறப்பாக இருந்தது.டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, தொடர்ந்து வலுவடைந்து வருவதையடுத்து, முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இதன் காரணமாகவே, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு உள்ளது என, இத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.அமெரிக்காவின், வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவர எதிர்பார்ப்பால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப்பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில் வங்கி, பொறியியல்,எண்ணெய்,எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்கு களுக்கு, அதிக தேவை காணப்பட்டது. இருப்பினும், நுகர்வோர்சாதனங்கள்,ரியல் எஸ்டேட்,மோட்டார் வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது,290.30 புள்ளிகள் அதிகரித்து, 19,270.06 புள்ளி களில் நிலை கொண் டது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக,19,293.96 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,929.38 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஓ.என்.ஜி.சி., பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலை அதிக ரித்தும், டாட்டா பவர், கோல் இந்தியா, சேச கோவா உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 87.45 புள்ளிகள் உயர்ந்து, 5,680.40 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,688.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,566.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)