பதிவு செய்த நாள்
07 செப்2013
00:22
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம்,வாரத்தின் கடைசி வர்த்தக தினமான நேற்றும் சிறப்பாக இருந்தது.டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, தொடர்ந்து வலுவடைந்து வருவதையடுத்து, முதலீட்டாளர்கள், ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இதன் காரணமாகவே, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு உள்ளது என, இத் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.அமெரிக்காவின், வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவர எதிர்பார்ப்பால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப்பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. நேற்றைய வர்த்தகத்தில் வங்கி, பொறியியல்,எண்ணெய்,எரிவாயு உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்கு களுக்கு, அதிக தேவை காணப்பட்டது. இருப்பினும், நுகர்வோர்சாதனங்கள்,ரியல் எஸ்டேட்,மோட்டார் வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது,290.30 புள்ளிகள் அதிகரித்து, 19,270.06 புள்ளி களில் நிலை கொண் டது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக,19,293.96 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 18,929.38 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஓ.என்.ஜி.சி., பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலை அதிக ரித்தும், டாட்டா பவர், கோல் இந்தியா, சேச கோவா உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 87.45 புள்ளிகள் உயர்ந்து, 5,680.40 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,688.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,566.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|