நாட்டின் மலர்கள் ஏற்றுமதி ரூ.423 கோடியாக வளர்ச்சிநாட்டின் மலர்கள் ஏற்றுமதி ரூ.423 கோடியாக வளர்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு ...
புதிய ஓய்வூதிய மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2013
00:27

புதுடில்லி: ராஜ்யசபாவில், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா - 2011, நிறை வேறி யது. கடந்த 4ம் தேதி லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நேற்று ராயசபாவில் தாக்கல் செய்தார்.
அதிகாரம்:பின்னர், மசோதா மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது: கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இந்த மசோதா நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவிற்கு உரிய மதிப்பை நாம் அளித்து, அதை நிறைவேற்ற வேண் டும். இந்த மசோதா குறித்து, பார்லிமென்ட் நிலைக்குழு அளித்த பரிந்துரைகளில், ஒன்றை தவிர, அனைத்தையும் ஏற் றுக் கொண்டுள்ளோம். தற்போது, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர். டீ.ஏ.,) சட்ட அதிகாரம் இல்லாமல் உள்ளது.
இந்த மசோதா,இந்த ஆணையத்திற்கு சட்ட அதிகாரத்தை வழங்கும்."சம்பாதிக்கும் போதே சேமிப்பு' என்ற நோக்கத் தில், புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், ஓய்வூதியதாரர்கள், தங்களுக்கு விருப்பமான, நிலை யான வருவாய்க்கு உறுதி அளிக்கும் திட்டங்களில், முதலீடு செய்ய பல வாய்ப்புகள் உள்ளன.
அரசு கடன்பத்திரங்கள் அல்லது இதர நிதியங்களில்,ஓய்வூதியதாரர்கள், முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு தகுந்த பாது காப்பு உள்ளது. தற்போதுள்ள ஓய்வூதிய நடைமுறையில் பாதுகாப்பு இல்லை. அதனால், ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு சட்டபூர்வ அதிகாரம் வழங்குவது அவசியமாகிறது.
26 மாநில அரசு ஊழியர்கள் உட்பட, 52.83 லட்சம் சந்தாதாரர்களின், 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதிய நிதியத்தை, பி.எப்.ஆர். டீ.ஏ., நிர்வகிக்க வேண்டியுள்ளது.
வாக்கெடுப்பு:சட்டபூர்வ அதிகாரம் அளிக்காவிடில், 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான ஓய்வூதிய நிதியத்தை நிர்வகிக்க முடியாது. சட்ட அதிகாரம் இல்லாத ஓர் அமைப்பை, சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற இந்த மசோதா உதவும். இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து, நடைபெற்ற வாக்கெடுப்பில், 115 எம்.பி.,க்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு எதிராக, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட, 25 எம்.பி., க்கள் வாக்களித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)