பதிவு செய்த நாள்
07 செப்2013
00:27
புதுடில்லி: ராஜ்யசபாவில், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய மசோதா - 2011, நிறை வேறி யது. கடந்த 4ம் தேதி லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், நேற்று ராயசபாவில் தாக்கல் செய்தார்.
அதிகாரம்:பின்னர், மசோதா மீதான விவாதத்திற்கு பதில் அளித்து அவர் பேசியதாவது: கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இந்த மசோதா நிலுவையில் உள்ளது. இந்த மசோதாவிற்கு உரிய மதிப்பை நாம் அளித்து, அதை நிறைவேற்ற வேண் டும். இந்த மசோதா குறித்து, பார்லிமென்ட் நிலைக்குழு அளித்த பரிந்துரைகளில், ஒன்றை தவிர, அனைத்தையும் ஏற் றுக் கொண்டுள்ளோம். தற்போது, ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர். டீ.ஏ.,) சட்ட அதிகாரம் இல்லாமல் உள்ளது.
இந்த மசோதா,இந்த ஆணையத்திற்கு சட்ட அதிகாரத்தை வழங்கும்."சம்பாதிக்கும் போதே சேமிப்பு' என்ற நோக்கத் தில், புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், ஓய்வூதியதாரர்கள், தங்களுக்கு விருப்பமான, நிலை யான வருவாய்க்கு உறுதி அளிக்கும் திட்டங்களில், முதலீடு செய்ய பல வாய்ப்புகள் உள்ளன.
அரசு கடன்பத்திரங்கள் அல்லது இதர நிதியங்களில்,ஓய்வூதியதாரர்கள், முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு தகுந்த பாது காப்பு உள்ளது. தற்போதுள்ள ஓய்வூதிய நடைமுறையில் பாதுகாப்பு இல்லை. அதனால், ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு சட்டபூர்வ அதிகாரம் வழங்குவது அவசியமாகிறது.
26 மாநில அரசு ஊழியர்கள் உட்பட, 52.83 லட்சம் சந்தாதாரர்களின், 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதிய நிதியத்தை, பி.எப்.ஆர். டீ.ஏ., நிர்வகிக்க வேண்டியுள்ளது.
வாக்கெடுப்பு:சட்டபூர்வ அதிகாரம் அளிக்காவிடில், 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான ஓய்வூதிய நிதியத்தை நிர்வகிக்க முடியாது. சட்ட அதிகாரம் இல்லாத ஓர் அமைப்பை, சட்ட அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்ற இந்த மசோதா உதவும். இவ்வாறு அவர் பேசினார்.இதையடுத்து, நடைபெற்ற வாக்கெடுப்பில், 115 எம்.பி.,க்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு எதிராக, இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட, 25 எம்.பி., க்கள் வாக்களித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|