இ.பி.எப்., கணக்குகள் ஆன்-லைனில் அறிமுகம்இ.பி.எப்., கணக்குகள் ஆன்-லைனில் அறிமுகம் ... முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 23.32 கோடி டன் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 23.32 கோடி டன் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
எங்கும் எப்பொழுதும் உறுதுணையாக பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 1
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2013
18:25

பி.எம்.டபிள்யூ. நிறுவனம், இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிமுகப்படுத்திய, பி.எம்.டயிள்யூ. எக்ஸ்1 அந்நிறுவனத்திற்கே உரித்தான சிறப்பு அம்சங்களுடனும், அதே நேரம் நியாயமான விலை, எரிபொருள் சிக்கனம் போன்றவைகளுடன், இந்திய கார் ரசிகர்களின் தேவையை பூர்த்தி செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ எக்ஸ்1 வெளியே: பிஎம்.டபிள்யூ எக்ஸ்1 மாடல் மூன்று ட்ரிம்களில் முறையே, எக்ஸ்1 20 டி, 20டி ஸ்போர்ட்ஸ் லைன் மற்றும் 20டி எக்ஸ் - லைன் என்று கிடைக்கிறது. இக்கார்களின் அசகாய செயல்திறனுக்கு ஏற்ப, இதன் வெளித் தோற்றமும், கம்பீரமான தோற்றத்துடன் கூடவே, நளினமான அழகையும் உள்ளடக்கியுள்ளது. சற்றே உயர்ந்த பக்கவாட்டு கோடுகள், நீளமான வீல் பேஸ், அதிகமாக தெரியும் பாடி கலரும், கீழே தெரியும் மெல்லிய சில்வர் லைன் எக்ஸ் மாடல்களின் தனித்துவ தோற்றத்தை இதற்கும் வழங்குகிறது. டபிள் ரவுண்ட் ஹெட்லைன் (ஜெனான் தொழில்நுட்பம் கொண்டது) மற்றும் சைட் மிர்ரருடன் கூடிய இன்டிகேட்டர், மிக அழகாக பொருத்தப்பட்டுள்ளது. பின்புற டெயில் லாம்ப் எல்இடி டெக்னாலஜியுடன் "ட' வடிவில் பார்த்தும், பி.எம்.டபிள்யூ என்று அடையாளம் காணும் வண்ணம் உள்ளது.

பி.எம்.டபிள்யூ உள்ளே: ஓட்டுனரின் அதிகபட்ச தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம், காக்பிட் உயர் தரமாகவும், இருக்கைகளின் வடிவமைப்பு பிரத்யேகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்டர் கன்சோல் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டுனரின் தேவைக்கேற்ப, ஆப்ஷனல் நேவிகேஷன் சிஸ்டம், ஏர் கண்டிஷனர் மற்றும் ஐ - டிரைவ் கன்ட்ரோலர் போன்றவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ எக்ஸ்1 ஓட்டுவதற்கு: பி.எம்.டபிள்யூ ட்வின்பவர் டர்போ 4 சிலிண்டர் டீசல் இன்ஜினில் 5 டிரைவ் 20டி உள்ளதால், உற்சாகமான ஓட்டும் அனுபவத்தை வழங்குகிறது. இது, 184 எச்.பி பவரையும், 1750 - 2750 ஆர்பிஎம்மில் 380 என்.எம் டார்க்கையும் வழங்கி அசத்துகிறது. இதன் செர்வோட்ரானிக் பவர், ஸ்டியரிங் எம்மாதிரியான தருணத்திலும், ஸ்திரமான மென்மையான ஸ்டியரிங் அனுபவத்தை வழங்குகிறது. கருங்கற்கள் உள்ள சாலையோ, பனி படர்ந்த சாலையோ எதுவானாலும், இதன் டைனமிக் ட்ராக்ஷன் கன்ட்ரோல் சக்கரங்கள், பாதையின் தடம் பிறழாமல் பார்த்துக் கொள்கிறது.

பி.எம்.டபிள்யூ எக்ஸ்1 சிக்கனத்திற்கு: இதில், இசிஓ பிஆர்ஓ' மோட்டில் நாம் செட் செய்து விட்டால், எம்மாதிரியான நம் ஓட்டும் திறன் இருந்தாலும், எரிபொருள் சிக்கனம் கொடுக்கும் வகையில், தானாகவே இயங்குகிறது. மேலும், இதன் ஆட்டோ ஸ்டார்ட் செயல்பாடு வண்டி நின்று கிளம்பும் சமயங்களில், வீணாகும் எரிபொருளை சேமிக்கிறது. இதன் ப்ரேக் எனர்ஜி ரீ - ஜெனரேஷன் மூலம் ப்ரேக் செய்யும் போது விரயமாகும் சக்தியை, அப்படியே மீட்டு, பாட்டரியை சார்ஜ் செய்ய உபயோகித்துக் கொள்கிறது. அத்துடன் இன்றைய தொழில்நுட்பத்தை கொண்டு, நாளைய நவீன் ஓட்டும் திறனை வளர்க்கும் விதமாக, பி.எம்.டபிள்யூவின் செயல்திறன், இதன் எல்லா வாகனங்களிலும் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பி.எம்.டபிள்யூ எக்ஸ்1 சொகுசிற்கு: நாம் விரும்பும் இடத்தை சீக்கிரமாகவும், சுகமாகவும் சென்றடைய உதவும், நேவீகேஷன் சிஸ்டம் ப்ராபஷனல் இதில் நம் குரலைக் கொண்டு இயங்கும் வண்ணம் உள்ளது. (வாய்ஸ் கன்ட்ரோல்) இதன் டிரைவ் மூலம், காரின் எல்லா செயல்பாட்டையும், ஒரே பட்டனில் இயக்கவும், கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

பி.எம்.டபிள்யூ எக்ஸ்1 பாதுகாக்க: ஆக்டிவ் சேப்டி விபத்தை தடுக்கும் பொருட்டு, இதன் சாதுர்யமான ரோட் சேப்டி சிஸ்டம் பல பிரச்னைகளையும், சுலபமாக சமாளிக்க உதவுகிறது. (0பேசீவ் சேப்டி) இதன் உறுதியான கட்டமைப்பும், நவீன தொழில்நுட்ப அம்சங்களும், விபத்து நடந்து விட்டாலும், பயணிகளின் உயிருக்கும், உடைமைக்கும் சேதம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. பி.எம்.டபிள்யூ எக்ஸ்1 பொழுதுபோக்க: இதன் டிரைவ் கன்ட்ரோலர் மூலம், எல்லா அப்ளிகேஷன்களையும் சுலபமாக இயக்க முடியும். ஐ போனை ஆப்பிள் கேபிள் மூலம், காருடன் இணைத்து விட்டால், சுலபமாக ஆப்ஸ்களை இயக்கலாம். மேலும், புளூடூத் இன்டர்பேஸ் மூலமாக, ஸ்மார்ட்போன்களை காருடன் இணைத்து, எல்லா அம்சங்களையும் உபயோகித்துக் கொள்ளலாம். பி.எம்.டபிள்யூ எக்ஸ்1 மொத்தத்தில்: உலகத்தரமான நிறுவனத்தின் உயர்தரமான வாகனம், பிரத்யேகமான தோற்றம், சிறந்த சிக்கனம் உயர்ந்த தொழில்நுட்பம் இதுவே, பி.எம்.டபிள்யூ எக்ஸ்1.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)