பதிவு செய்த நாள்
07 செப்2013
18:32
மஹிந்திரா குழுமத்தின் அங்கமான, மஹிந்திரா டூ வீலர்ஸ் நிறுவனம், தன் மஹிந்திரா சென்ட்யூரரோ மோட்டர் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்ட, ஆறு வரை காலத்திற்குள், 32 ஆயிரத்திற்கும் அதிகமான, முன் பதிவுகளுடன் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. மஹிந்திரா சென்ட்யூரோ கடந்த ஜூலை முதல் தேதியன்று, ஜெய்ப்பூரில் அறிமுகப்படுத்தப்பட்டது, குறிப்பிடத்தக்கதாகும். மெர்சிடெஸ் பென்ஸ் இந்தியா, செப்டம்பர் ஒன்று முதல், தங்களின் எல்லா வாகனங்களின் விலையும், 2.5 சதவீதம் முதல், 4.5 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது, புதியதாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஜி.எல்., க்ளாசின் விலையில் மட்டும், எந்த மாற்றமுமில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (ஹச்.சி.ஐ.எல்.,) நிறுவனம் 30 ஆயிரம் ஹோண்டா அமேஸ் கார்களை விற்று முடித்து, விற்பனையில் சாதனைப்படைத்துள்ளது. ஏப்ரல், 2013ல் அறிமுகப்படுத்தப்பட்ட சொகுசு செடான் காரான அமேஸ், வேகமான விற்பனை வளர்ச்சியை குறுகிய காலத்தில் பெற்றுள்ளது. ஹ்யுண்டாய் நிறுவனம் செப்., 4ம் தேதி, தங்களின் புதிய க்ராண்ட் -------காரை, சென்னையில் அறிமுகப்படுத்தவுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|