பதிவு செய்த நாள்
08 செப்2013
01:17
புதுடில்லி:நடப்பு 2013-14ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் ஐந்து மாத காலத்தில், நாட்டின் @நரடி வரி வ‹ல், 1.88 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இ@த காலத்தில், 1.64 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார மந்தநிலையிலும், மதிப்பீட்டு காலத்தில், நேரடி வரி வசூல், 14.43 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது, எனினும், இது, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்திற்கான, இலக்கை விட சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற முழு நிதியாண்டில், மத்திய அரசு, நேரடி வரிகள் வாயிலாக, 5.65 லட்சம் கோடி ரூபாயை திரட்டியது. இவ்வாண்டில், இதனை, 6.68 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி இலக்கு நிர்ணயித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், நிகர நேரடி வரி வசூல், 15.42 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,24,019 @காடியிலிருந்து, 1,43,138 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், தொழில் துறையில் ஏற்பட்டுள்ள ”ணக்க நிலையிலும், நிறுவனங்கள் செலுத்திய வரி, 11.72 சதவீதம் உயர்ந்து, 96,738 கோடி ரூபாயிலிருந்து, 1,08,075 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இதே போன்று, தனிநபர் செலுத்திய வருமான வரியும், 18.91 சதவீதம் உயர்ந்து, 65,752 கோடியிலிருந்து, 78,187 @காடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும், பங்கு பரிவர்த்தனை வரி வசூல், 1,649 @காடி ரூபாயாக உள்ளது.இவை தவிர, கணக்கீட்டு காலத்தில், செல்வ வரியும், 2.44 சதவீதம் உயர்ந்து, 225 கோடியிலிருந்து, 280 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது என, மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|